டெல்லியில் விஜய்.. கரூர் சம்பவம் தொடர்பாக.. இன்று சிபிஐ விசாரணை

Jan 12, 2026,10:11 AM IST

டெல்லி: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தவுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


கரூர் விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தவெக பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாவிட்டாலும் கூட, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய்க்கு சிபிஐ அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.




அவர் கலந்து கொண்ட கூட்டம் என்பதால் அவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. அதன்படி இன்று சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்காக தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று முற்பகல் 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.


டெல்லியில் விஜய் ஆஜராவதை ஒட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக தரப்பில் டெல்லி காவல்துறையிடம் கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த கூட்டத்தில் அனுமதித்த அளவை விட அதிகமான மக்கள் கூடியதே நெரிசலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) ரத்து செய்த உச்சநீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் ஆதாரங்களையும், வீடியோ காட்சிகளையும் சமர்ப்பித்துள்ளனர். இன்று விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வாழ்த்துவதில் முந்திய பிரதமர் மோடி.. லேட்டாக வந்த ராகுல் காந்தி!

news

Iran Vs Israel : ஒரு காலத்தில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் நல்ல தோஸ்த் தெரியுமா?

news

Khamenei Assasination: விரைவில் வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை

news

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை

news

போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்