வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் அவ்வப்போது ஏதாவது ஒரு சில ஆச்சரியங்களும், அரிதான நிகழ்வுகளும் நடக்க தான் செய்கின்றன. இரட்டை இழந்தைகள் என்பது அரிதான நிகழ்வு தான். ஆனால் ஒரு இரட்டைக் குழந்தை வித்தியாசமாக பிறந்து அனைவரையும் மகிழ்ச்சி பிளஸ் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஒரு குழந்தையும், ஜனவரி 1ம் தேதி ஒரு குழந்தையும் பிறந்து டாக்டர்களையும், பெற்றோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பில்லி ஹம்ப்ரே - ஈவ் தம்பதிகளுக்குத்தான் ஒரே பிரசவத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு ஆண்டு பிறந்த நாள் என்பது தான் ஆச்சரியம் கலந்த சுவாரஸ்ய சம்பவமாக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஈவ் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31ம் தேதி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அன்று இரவு 11.48 மணிக்கு அவருக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் 12 மணி தாண்டிய நிலையில், அதாவது 2024ம் ஆண்டு பிறந்த நிலையில், மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தை பிறந்ததால் அங்கிருந்தவர்கள் ஆச்சிரியத்தில் திகைத்தனர்.
இந்த சம்பவம் இரட்டை குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். அந்த தம்பதிகள் ஒரு குழந்தைக்கு எஸ்ரா என்றும், மற்றொரு குழந்தைக்கு எசேக்கியேல் எனவும் பெயர் சூட்டி உள்ளனர்.
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!