மத்திய பட்ஜெட் 2024: வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?.. எதிர்பார்ப்பில் சம்பளதாரர்கள்

Jul 23, 2024,08:30 AM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது. இது பிரதமர் மோடியின் 3வது அரசாகும். வாஜ்பாய் காலத்திற்குப் பிறகு அமைந்துள்ள முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுமாகும்.


புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து அந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். தனிப்பட்ட முறையில் அவருக்கு இது 7வது மத்திய பட்ஜெட்டாகும். 




இந்த பட்ஜெட் 3வது மோடி அரசுக்கு முதல் பட்ஜெட் என்பதால்  சலுகைகள் அதிகம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. ஆனால் அத்தனையும் நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை. அதேபோல சமூகத்தின் ஒவ்வொரு தட்டு மக்களும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதில் எத்தனை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


குறிப்பாக மாதச் சம்பளதாரர்கள், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் அது நடக்குமா என்ற ஊகத்தில் அவர்கள் உள்ளனர்.


காஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு என பல்வேறு விலை உயர்வுகளும் சாமானிய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளன. இதற்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது நிவாரணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளதாக மாநில அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய ரயில் திட்டங்கள் தேவை என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதேபோல பல திட்டங்கள் நீண்ட காலமாக இழுபறியாக உள்ளன. அவற்றுக்கும் ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


இப்படி பல்வேறு தரப்பிலும் பல விதமான கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் உள்ளதால் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி கொடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.


புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது கூடுதல் சிறப்பாகும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்