மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

Jun 26, 2026,05:09 PM IST

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன. வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.


யாரெல்லாம் வெளியேற வாய்ப்பு?

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது அதிரடி நடவடிக்கை பாயலாம் எனத் தெரிகிறது. சமீபத்தில் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்கும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. பஞ்சாபில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பதிலாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியத் தலைவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. ராகவ் சந்தாவின் பெயரும் இதில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


துறைகள் மாறப்போகும் முக்கிய அமைச்சர்கள்:




மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி மற்றும் மனோகர் லால் கட்டார் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்மலா சீதாராமன் தற்போதைய நிதித்துறையிலிருந்து மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு (கல்வி அமைச்சகம்) மாற்றப்படலாம் என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான சக்திகாந்த தாஸ் முழு நேர கேபினட் அமைச்சராக நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதிதாக உள்ளே வரும் கூட்டணிக் கட்சிகள்:

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

- மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், லோக்சபா எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

- ஜேடியு (JD-U) தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான நிதிஷ் குமார் மத்திய அமைச்சரவையில் இணையக்கூடும் என்ற பலத்த ஊகம் எழுந்துள்ளது.

- திரிணாமுல் காங்கிரஸிலிருந்து (TMC) விலகிய சுகேந்து சேகர் ராய் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 அதிருப்தி எம்பிக்கள் அமைச்சரவை பதவியைக் கோரி வருகின்றனர். பாஜகவுக்கு அடுத்தபடியாக என்டிஏ (NDA) கூட்டணியில் இரண்டாவது பெரிய பிரிவாக விளங்கும் இவர்கள், டிடிபி மற்றும் ஜேடியு கட்சிகளைப் போல தங்களுக்கும் கேபினட் அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


மத்திய அமைச்சரவையின் இந்த அதிரடி மாற்றம், இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்