மதுரை: திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனை காவல்துறையினர் தடுத்தபோது அவர்களுடன் ஆவேசமாக வாதிட்டார் அமைச்சர் முருகன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார்.
பாஜக தொண்டர்கள் புடை சூழ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திருப்பரங்குன்றம் சென்றார். மலை மீது உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பாஜக தொண்டர்களுடன் செல்ல முற்பட்டா். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் மத்திய இணை அமைச்சருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பேசிய மத்திய இணையமைச்சர், இதை நான் சும்மா விட மாட்டேன். கோவிலுக்கு போறதுக்கு ஏதும் தடை இருக்கா. இது முறையானது அல்ல. மத்திய அமைச்சரை தடுத்து நிறுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால், நான் மட்டும் தனியாக செல்கிறேன் என்று கூறி சென்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் செல்ல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட 4 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் மலை மீது ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஐ.நா.சபையில் தமிழ் மொழியை பிரதமர் போற்றியுள்ளார். தமிழ் மிக தொன்மையான மொழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் மொழிக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரசும், திமுகவும் நடத்த விடாமல் தடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் கொண்டு வந்தார்.
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக தமிழக அரசு மாற்றி உள்ளது. மலை மீது தீபம் ஏற்ற அறநிலையத்துறை விரைவில் முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம். அங்கு பலியிடும் வழக்கம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?
என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!
PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு
கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!
Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!
ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!
தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!
{{comments.comment}}