தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ. 87 கோடி நிதி.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Jan 03, 2025,02:39 PM IST

டெல்லி: தமிழ்நாட்டில்  உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154  அகலப்படுத்த ரூ. 18.29 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்தூர் பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த ரூ.20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவ்டடத்தில் தருமத்துப்பட்டி ஆடலூர்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.




இந்த நிதி மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும். போக்குவரத்து திறனை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும். தமிழ்நாடு முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

news

CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?

news

ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு

news

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!

news

ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்

news

மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்

news

அழகுடனே சொலிக்குதடா ஆனந்தமும் கூட!

அதிகம் பார்க்கும் செய்திகள்