டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த ரூ. 18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்தூர் பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த ரூ.20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவ்டடத்தில் தருமத்துப்பட்டி ஆடலூர்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதி மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும். போக்குவரத்து திறனை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும். தமிழ்நாடு முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}