டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த ரூ. 18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்தூர் பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த ரூ.20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவ்டடத்தில் தருமத்துப்பட்டி ஆடலூர்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிதி மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும். போக்குவரத்து திறனை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும். தமிழ்நாடு முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓர் இரும்பு கூழானது!
Short Story: கன்னிகாஸ்திரி !
ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
Tamil Poem: பணமும் மனிதமும்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Tamil Poem: ரோஜா மலர்கள்!
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
{{comments.comment}}