ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. மிதக்கும் துபாய்.. இதுவரை 18 பேர் பலி

Apr 17, 2024,10:59 AM IST

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் கொட்டி தீர்த்த கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ரோடுகளில் ஓடுகிறது. இந்த மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழையால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்


கடந்த இரு நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை காரணமாக  அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 




சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் நீரில்  மூழ்கியுள்ளன. தேசிய சாலைகள், சுரங்க சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்த சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய விமான நிலையமான துபாய் விமான நிலையம் முழுவதும் மழை  நீர் தேங்கியதால் பெரும்பாலான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




இந்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேரும், பள்ளி வாகனம் அடித்து செல்லப்பட்டதில் 10 பேரும் பலியாகியுள்ளனர். மழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மழை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். இந்த அளவிற்கான கன மழையை அங்குள்ள மக்கள் பார்த்தது இல்லை என்று கூறி வருகின்றனர்.இந்த மழை மேலும் தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்