வாஷிங்டன்: இஸ்ரேலின் அசுரத்தனமான தாக்குதலால் அப்பாவி பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்.
ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். தனது வான்வெளித் தாக்குதல் மூலம் காஸா பகுதியை நிர்மூலமாக்கிய இஸ்ரேல் தற்போது தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இதனால் அப்பாவிகள் பலர் பலியாகும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபக்கம் உலக அளவில் இஸ்ரேலின் தாக்குதலை பலரும் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிப்போரும் கூட தாக்குதலை குறைத்து விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இஸ்ரேலை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா, தற்போது இஸ்ரேலுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்களுடன் பேசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேலைக் காப்பாற்றும் Damage control நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் ஆகியோரை அதிபர் பிடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்படி ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இஸ்ரேலுக்கு உதவ மறுபக்கம் போர் விமானங்களையும், போர்க்கப்பலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் உள்ளது.
பாலஸ்தீன அதிபருடன் பிடன் பேசுகையில், ஹமாஸ் நடவடிக்கையைக் கண்டித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும், சுய நிர்ணயத்துக்கும், கெளரவத்துக்காகவும் துணை நிற்கும் தகுதி ஹமாஸுக்கு இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார். நதன்யாஹுவிடம் பேசும்போது, அந்த நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை சரியே என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளுமாறும் நதன்யாகுவை பிடன் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் போர் பாதித்த பகுதிகளில் அப்பாவி மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பது தடைபடக் கூடாது என்றும் பிடன், நதன்யாகுவிடம் ஆலோசித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.நா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் பிடன் ஆலோசித்துள்ளார். அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார்.
அதேசமயம், பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கு மிரட்டலாக மாறியுள்ள ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்றும் பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.
மறுபக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் முஸ்லீம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். ரியாத் சென்ற அவர் அங்கு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பைசல் பின் பர்ஹானை சந்தித்துப் பேசினார். பின்னர் அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல்நஹன்யானை சந்தித்துப் பேசினார். முஸ்லீம் நாடுகளின் ஆதரவை, இஸ்ரேலுக்கு திருப்பும் அமெரிக்க முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}