சாலைகளில் மத ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.. உ.பி. அரசு தடை

Apr 20, 2023,01:30 PM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் எதிர் வரும் ரம்ஜான், அட்சய திருதியை, பரசுராம் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின் போது  சாலைகளில் மத ரீதியான எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்த நிகழ்வையும் அனுமதிக்க முடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மத ரீதியான நிகழ்வுகள் உள்ளுக்குள்ளேயேதான் நடத்தப்பட வேண்டும். யாரும் சாலைகளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. அது அனுமதிக்கப்படக் கூடாது என்று அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் மத ரீதியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது. நடத்த முயன்றால் அதை அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது. தெருக்கள், சாலைகளில் மத ரீதியிலான நிகழ்வுகளை யாரேனும் நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பொய்ச் செய்திகள், துவேஷ செய்திகள் பரவாமல் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற செய்திகள் வந்தால் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பே முக்கியம். மத விழாக்களால் இவை பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான், பரசுராம் ஜெயந்தி, அட்சய திருதியை ஆகிய இந்த மூன்று விழாக்களும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

Tamil Short Story: எதார்த்தம்!

news

ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்