சாலைகளில் மத ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.. உ.பி. அரசு தடை

Apr 20, 2023,01:30 PM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் எதிர் வரும் ரம்ஜான், அட்சய திருதியை, பரசுராம் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின் போது  சாலைகளில் மத ரீதியான எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்த நிகழ்வையும் அனுமதிக்க முடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மத ரீதியான நிகழ்வுகள் உள்ளுக்குள்ளேயேதான் நடத்தப்பட வேண்டும். யாரும் சாலைகளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. அது அனுமதிக்கப்படக் கூடாது என்று அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் மத ரீதியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது. நடத்த முயன்றால் அதை அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது. தெருக்கள், சாலைகளில் மத ரீதியிலான நிகழ்வுகளை யாரேனும் நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பொய்ச் செய்திகள், துவேஷ செய்திகள் பரவாமல் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற செய்திகள் வந்தால் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பே முக்கியம். மத விழாக்களால் இவை பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான், பரசுராம் ஜெயந்தி, அட்சய திருதியை ஆகிய இந்த மூன்று விழாக்களும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்