- வே.ஜெயந்தி
சித்திரை மாதம்
தமிழனின் புத்தாண்டு,
அனைவரும் ஒன்று கூடும்
அன்பு நிறைந்த விழா.
புத்தாண்டே வருக,
புன்னகையுடன் வாழ்த்திடு,
ஒவ்வொருவரின் வாழ்விலும்
புது பொலிவை தந்திடு.
போர்க்களம் இல்லாத உலகம்
அமைதியை தந்து விடு,
அன்பும் அமைதியும் நிறைந்த
நாட்களை பரிசளித்து விடு.

வாழ்க்கையின் தத்துவம்
சமையலில் தெரியும்;
இனிப்புக்கு சக்கரை பொங்கல்,
கசப்புக்கு வேப்பம்பூ ரசம்,
புளிப்புக்கு மாங்காய் பச்சடி,
துவர்ப்புக்கு வாழைப்பூ வடை,
உவர்ப்புக்கு உப்பு உருண்டை—
ஐவகை உணவு வகைகள்
சொல்லும் வாழ்வின் தத்துவம்.
கோலம் பூத்த வீதிகளில்
கொண்டாட்டம் மலரட்டும்,
குடும்பங்கள் இணைந்து
களிப்புடன் வாழட்டும்.
கனவுகள் எல்லாம் நனவாக
காலம் துணை நிற்கட்டும்,
கஷ்டங்கள் நீங்கி
களிப்புகள் பெருகட்டும்.
புது வருடம் வருகையால்
புதிய நம்பிக்கை பிறக்கட்டும்,
ஒவ்வொரு இதயத்திலும்
ஒளி நிறைந்த நாள்கள் உதிக்கட்டும்.
இயற்கை நமக்கு அளிக்கும்
இன்பத்தை உணர்த்தட்டும்,
இணக்கம் நிறைந்த வாழ்வு
என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}