- வே.ஜெயந்தி
சித்திரை மாதம்
தமிழனின் புத்தாண்டு,
அனைவரும் ஒன்று கூடும்
அன்பு நிறைந்த விழா.
புத்தாண்டே வருக,
புன்னகையுடன் வாழ்த்திடு,
ஒவ்வொருவரின் வாழ்விலும்
புது பொலிவை தந்திடு.
போர்க்களம் இல்லாத உலகம்
அமைதியை தந்து விடு,
அன்பும் அமைதியும் நிறைந்த
நாட்களை பரிசளித்து விடு.

வாழ்க்கையின் தத்துவம்
சமையலில் தெரியும்;
இனிப்புக்கு சக்கரை பொங்கல்,
கசப்புக்கு வேப்பம்பூ ரசம்,
புளிப்புக்கு மாங்காய் பச்சடி,
துவர்ப்புக்கு வாழைப்பூ வடை,
உவர்ப்புக்கு உப்பு உருண்டை—
ஐவகை உணவு வகைகள்
சொல்லும் வாழ்வின் தத்துவம்.
கோலம் பூத்த வீதிகளில்
கொண்டாட்டம் மலரட்டும்,
குடும்பங்கள் இணைந்து
களிப்புடன் வாழட்டும்.
கனவுகள் எல்லாம் நனவாக
காலம் துணை நிற்கட்டும்,
கஷ்டங்கள் நீங்கி
களிப்புகள் பெருகட்டும்.
புது வருடம் வருகையால்
புதிய நம்பிக்கை பிறக்கட்டும்,
ஒவ்வொரு இதயத்திலும்
ஒளி நிறைந்த நாள்கள் உதிக்கட்டும்.
இயற்கை நமக்கு அளிக்கும்
இன்பத்தை உணர்த்தட்டும்,
இணக்கம் நிறைந்த வாழ்வு
என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தென்றல் பாடும் தாலாட்டு!
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!
எழுத்தாளர் மனைவி!
உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!
Tamil Poem: பனித்துளி!
500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
{{comments.comment}}