- வே.ஜெயந்தி
சித்திரை மாதம்
தமிழனின் புத்தாண்டு,
அனைவரும் ஒன்று கூடும்
அன்பு நிறைந்த விழா.
புத்தாண்டே வருக,
புன்னகையுடன் வாழ்த்திடு,
ஒவ்வொருவரின் வாழ்விலும்
புது பொலிவை தந்திடு.
போர்க்களம் இல்லாத உலகம்
அமைதியை தந்து விடு,
அன்பும் அமைதியும் நிறைந்த
நாட்களை பரிசளித்து விடு.

வாழ்க்கையின் தத்துவம்
சமையலில் தெரியும்;
இனிப்புக்கு சக்கரை பொங்கல்,
கசப்புக்கு வேப்பம்பூ ரசம்,
புளிப்புக்கு மாங்காய் பச்சடி,
துவர்ப்புக்கு வாழைப்பூ வடை,
உவர்ப்புக்கு உப்பு உருண்டை—
ஐவகை உணவு வகைகள்
சொல்லும் வாழ்வின் தத்துவம்.
கோலம் பூத்த வீதிகளில்
கொண்டாட்டம் மலரட்டும்,
குடும்பங்கள் இணைந்து
களிப்புடன் வாழட்டும்.
கனவுகள் எல்லாம் நனவாக
காலம் துணை நிற்கட்டும்,
கஷ்டங்கள் நீங்கி
களிப்புகள் பெருகட்டும்.
புது வருடம் வருகையால்
புதிய நம்பிக்கை பிறக்கட்டும்,
ஒவ்வொரு இதயத்திலும்
ஒளி நிறைந்த நாள்கள் உதிக்கட்டும்.
இயற்கை நமக்கு அளிக்கும்
இன்பத்தை உணர்த்தட்டும்,
இணக்கம் நிறைந்த வாழ்வு
என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}