மார்கழி பனித்துளி!

Dec 29, 2025,04:49 PM IST

- வே.ர. விஜயலக்ஷ்மி


காணக் காணப் பேரழகு..

தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..

கண்ணாடி உருவாய்       

துல்லிய தூய்மையாய்...        

பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு... 

வண்ண வண்ண மலர்கள்  சிலிர்ப்பை  உணர்த்தும்... 

பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி  கொள்ளை அழகு... 

இலையில் ஒட்டாமல்  உருண்டோடும்             

பனித்துளி  உலக பந்தத்தினோடு  சிக்காமல்,

ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்... 

மனிதன் வாழும் காலத் தில்


 


மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்  

மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன் 

அதிகாலை எழுதல், பாவை  பள்ளி எழப் பாடுதல்...

எல்லாம் வல்ல இறையை வணங்கி 

வாசலதில்  பசுஞ்சாண மிட்டு, 

வண்ணக்கோலம் வரைந்து

ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து  

திருவிளக்கேற்றி, அமுது படைத்து, 

பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்


(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

அரவணைப்பு

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

அம்மாவின் கோல நோட்டு (சிறுகதை)

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

news

சித்தத்தை சிவமயம் ஆக்கும்.. பித்தத்தை தெளிவாக சிவமாக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்