- வ. சரசுவதி
சூரியன் எழுந்து காலத்தின் கதவைக் கைத்தட்டி அழைத்தாலும் இன்னும் சற்று நேரம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று போர்வைக்குள் ஒளியும் ஆசையுடன் மூடிவிடும் மனம்....
கனவுகள் பல கண்டு
கண் விழித்துக் காத்திருக்கும் வேளையில்,
பயம்,சோம்பல்,தயக்கம்
மூன்றும் சேர்ந்து
மனதின் கதவைப்பூட்டும் வேளையில்
உறக்கம் மட்டும்
அதிகாரம் செலுத்துகிறது.
நாளை செய்வோம் என்ற
ஒரே சொல்லில்,
இன்று தவிர்த்த வேலை,
நாளைய பாரமாய் மாறி,
இன்றைய உழைப்பு
மெதுவாக மறைந்து,
நேரம் நம்மை முந்திச் சென்று,
கேள்வி கேட்கும் போது
மௌனமாய் நிற்கும் மனிதன்.
சோம்பேறித்தனம்
ஓய்வு அல்ல....
அது வாழ்க்கையை
மெதுவாக நிறுத்தும் பிரேக்.
அது முயற்சியின் மறைமுக எதிரி;
நம்பிக்கையைச் சுருக்கும்
மென்மையான சங்கிலி,
ஒரு முயற்சி,
ஒரு எழுச்சி,
ஒரு தொடக்கம்----
அதுவே சோம்பேறித் தனத்தின்
முதல் தோல்வி.
இன்று தொடங்கினால்
நாளை ஒளி;
இப்போது எழுந்தால்
எதிர் காலம் நம்முடன்--
சோம்பேறித்தனத்தை
விடைபெறச் செய்து,
உழைப்பை நண்பனாக்குவோம்.
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
மறக்கக் கூடாத நம்மாழ்வார்.. இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
{{comments.comment}}