- வ. சரசுவதி
சூரியன் எழுந்து காலத்தின் கதவைக் கைத்தட்டி அழைத்தாலும் இன்னும் சற்று நேரம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று போர்வைக்குள் ஒளியும் ஆசையுடன் மூடிவிடும் மனம்....
கனவுகள் பல கண்டு
கண் விழித்துக் காத்திருக்கும் வேளையில்,
பயம்,சோம்பல்,தயக்கம்
மூன்றும் சேர்ந்து
மனதின் கதவைப்பூட்டும் வேளையில்
உறக்கம் மட்டும்
அதிகாரம் செலுத்துகிறது.
நாளை செய்வோம் என்ற
ஒரே சொல்லில்,
இன்று தவிர்த்த வேலை,
நாளைய பாரமாய் மாறி,
இன்றைய உழைப்பு
மெதுவாக மறைந்து,
நேரம் நம்மை முந்திச் சென்று,
கேள்வி கேட்கும் போது
மௌனமாய் நிற்கும் மனிதன்.
சோம்பேறித்தனம்
ஓய்வு அல்ல....
அது வாழ்க்கையை
மெதுவாக நிறுத்தும் பிரேக்.
அது முயற்சியின் மறைமுக எதிரி;
நம்பிக்கையைச் சுருக்கும்
மென்மையான சங்கிலி,
ஒரு முயற்சி,
ஒரு எழுச்சி,
ஒரு தொடக்கம்----
அதுவே சோம்பேறித் தனத்தின்
முதல் தோல்வி.
இன்று தொடங்கினால்
நாளை ஒளி;
இப்போது எழுந்தால்
எதிர் காலம் நம்முடன்--
சோம்பேறித்தனத்தை
விடைபெறச் செய்து,
உழைப்பை நண்பனாக்குவோம்.
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}