வயநாடு நிலச்சரிவு: அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை.. வைரமுத்து உருக்கம்

Aug 01, 2024,11:56 AM IST

சென்னை:   பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக  2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்க்கப் பார்க்கப்

பதற்றம் தருகிறது

கேரளத்தின் நிலச்சரிவால்

நேர்ந்த நெடுந்துயரம்


இருந்த வீடுகளே

இடுகாடுகளானதில்

இந்திய வரைபடத்திலிருந்தே

சில கிராமங்கள்

இல்லாமல் போய்விட்டன


அது ஜலசமாதியா

நிலச் சமாதியா என்று

சொல்லத் தெரியவில்லை


பிணமாகிப் போனவர்களின்

கடைசிநேரத் துடிப்பு

என் உடலில் உணரப்படுகிறது


மனிதனுக்கு எதிராக

இயற்கை போர்தொடுத்தது

என்றும் சொல்லலாம்


இயற்கைக்கு எதிராக

மனிதன் தொடுத்த போரின்

பின்விளைவு என்றும் சொல்லலாம்


மலைகளை மழித்தல்

காடுகளை அழித்தல்

நதிகளைக் கெடுத்தல்

எல்லாம் கூடி

மனிதர்களைப்

பழிவாங்கியிருக்கின்றன


புவி வெப்பத்தால்

பைத்தியம்பிடித்த வானிலை

இன்னும் இதுபோல்

செய்யக்கூடும்


மனிதர்களும் அரசுகளும்

விழிப்போடிருத்தல் வேண்டும்


மூச்சுக் குழாயில்

மண் விழுந்து 

போனவர்க்கெல்லாம்

என் கண்விழுந்த கண்ணீரில்

அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்