சென்னை: பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக 2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
பார்க்கப் பார்க்கப்
பதற்றம் தருகிறது
கேரளத்தின் நிலச்சரிவால்
நேர்ந்த நெடுந்துயரம்
இருந்த வீடுகளே
இடுகாடுகளானதில்
இந்திய வரைபடத்திலிருந்தே
சில கிராமங்கள்
இல்லாமல் போய்விட்டன
அது ஜலசமாதியா
நிலச் சமாதியா என்று
சொல்லத் தெரியவில்லை
பிணமாகிப் போனவர்களின்
கடைசிநேரத் துடிப்பு
என் உடலில் உணரப்படுகிறது
மனிதனுக்கு எதிராக
இயற்கை போர்தொடுத்தது
என்றும் சொல்லலாம்
இயற்கைக்கு எதிராக
மனிதன் தொடுத்த போரின்
பின்விளைவு என்றும் சொல்லலாம்
மலைகளை மழித்தல்
காடுகளை அழித்தல்
நதிகளைக் கெடுத்தல்
எல்லாம் கூடி
மனிதர்களைப்
பழிவாங்கியிருக்கின்றன
புவி வெப்பத்தால்
பைத்தியம்பிடித்த வானிலை
இன்னும் இதுபோல்
செய்யக்கூடும்
மனிதர்களும் அரசுகளும்
விழிப்போடிருத்தல் வேண்டும்
மூச்சுக் குழாயில்
மண் விழுந்து
போனவர்க்கெல்லாம்
என் கண்விழுந்த கண்ணீரில்
அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}