வயநாடு நிலச்சரிவு: அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை.. வைரமுத்து உருக்கம்

Aug 01, 2024,11:56 AM IST

சென்னை:   பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக  2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்க்கப் பார்க்கப்

பதற்றம் தருகிறது

கேரளத்தின் நிலச்சரிவால்

நேர்ந்த நெடுந்துயரம்


இருந்த வீடுகளே

இடுகாடுகளானதில்

இந்திய வரைபடத்திலிருந்தே

சில கிராமங்கள்

இல்லாமல் போய்விட்டன


அது ஜலசமாதியா

நிலச் சமாதியா என்று

சொல்லத் தெரியவில்லை


பிணமாகிப் போனவர்களின்

கடைசிநேரத் துடிப்பு

என் உடலில் உணரப்படுகிறது


மனிதனுக்கு எதிராக

இயற்கை போர்தொடுத்தது

என்றும் சொல்லலாம்


இயற்கைக்கு எதிராக

மனிதன் தொடுத்த போரின்

பின்விளைவு என்றும் சொல்லலாம்


மலைகளை மழித்தல்

காடுகளை அழித்தல்

நதிகளைக் கெடுத்தல்

எல்லாம் கூடி

மனிதர்களைப்

பழிவாங்கியிருக்கின்றன


புவி வெப்பத்தால்

பைத்தியம்பிடித்த வானிலை

இன்னும் இதுபோல்

செய்யக்கூடும்


மனிதர்களும் அரசுகளும்

விழிப்போடிருத்தல் வேண்டும்


மூச்சுக் குழாயில்

மண் விழுந்து 

போனவர்க்கெல்லாம்

என் கண்விழுந்த கண்ணீரில்

அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்

news

திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!

news

தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?

news

இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

காதல் படுத்தும் பாடு!

news

ஒரு மல்லிகை பூக்காரியின் அனுபவம்!

news

சிலிர்க்க வைக்கும் தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பாரம்பரியம்.. Dancing Through History: Tamil Nadu’s Fol

news

தன்னந்தனியாய் போராட்டம்.. கலையின் பல்பொருள் ஹைக்கூ கவிதைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்