வயநாடு நிலச்சரிவு: அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை.. வைரமுத்து உருக்கம்

Aug 01, 2024,11:56 AM IST

சென்னை:   பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக  2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்க்கப் பார்க்கப்

பதற்றம் தருகிறது

கேரளத்தின் நிலச்சரிவால்

நேர்ந்த நெடுந்துயரம்


இருந்த வீடுகளே

இடுகாடுகளானதில்

இந்திய வரைபடத்திலிருந்தே

சில கிராமங்கள்

இல்லாமல் போய்விட்டன


அது ஜலசமாதியா

நிலச் சமாதியா என்று

சொல்லத் தெரியவில்லை


பிணமாகிப் போனவர்களின்

கடைசிநேரத் துடிப்பு

என் உடலில் உணரப்படுகிறது


மனிதனுக்கு எதிராக

இயற்கை போர்தொடுத்தது

என்றும் சொல்லலாம்


இயற்கைக்கு எதிராக

மனிதன் தொடுத்த போரின்

பின்விளைவு என்றும் சொல்லலாம்


மலைகளை மழித்தல்

காடுகளை அழித்தல்

நதிகளைக் கெடுத்தல்

எல்லாம் கூடி

மனிதர்களைப்

பழிவாங்கியிருக்கின்றன


புவி வெப்பத்தால்

பைத்தியம்பிடித்த வானிலை

இன்னும் இதுபோல்

செய்யக்கூடும்


மனிதர்களும் அரசுகளும்

விழிப்போடிருத்தல் வேண்டும்


மூச்சுக் குழாயில்

மண் விழுந்து 

போனவர்க்கெல்லாம்

என் கண்விழுந்த கண்ணீரில்

அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்