வயநாடு நிலச்சரிவு: அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை.. வைரமுத்து உருக்கம்

Aug 01, 2024,11:56 AM IST

சென்னை:   பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக  2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்க்கப் பார்க்கப்

பதற்றம் தருகிறது

கேரளத்தின் நிலச்சரிவால்

நேர்ந்த நெடுந்துயரம்


இருந்த வீடுகளே

இடுகாடுகளானதில்

இந்திய வரைபடத்திலிருந்தே

சில கிராமங்கள்

இல்லாமல் போய்விட்டன


அது ஜலசமாதியா

நிலச் சமாதியா என்று

சொல்லத் தெரியவில்லை


பிணமாகிப் போனவர்களின்

கடைசிநேரத் துடிப்பு

என் உடலில் உணரப்படுகிறது


மனிதனுக்கு எதிராக

இயற்கை போர்தொடுத்தது

என்றும் சொல்லலாம்


இயற்கைக்கு எதிராக

மனிதன் தொடுத்த போரின்

பின்விளைவு என்றும் சொல்லலாம்


மலைகளை மழித்தல்

காடுகளை அழித்தல்

நதிகளைக் கெடுத்தல்

எல்லாம் கூடி

மனிதர்களைப்

பழிவாங்கியிருக்கின்றன


புவி வெப்பத்தால்

பைத்தியம்பிடித்த வானிலை

இன்னும் இதுபோல்

செய்யக்கூடும்


மனிதர்களும் அரசுகளும்

விழிப்போடிருத்தல் வேண்டும்


மூச்சுக் குழாயில்

மண் விழுந்து 

போனவர்க்கெல்லாம்

என் கண்விழுந்த கண்ணீரில்

அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்