வயநாடு நிலச்சரிவு: அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை.. வைரமுத்து உருக்கம்

Aug 01, 2024,11:56 AM IST

சென்னை:   பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


கனமழை காரணமாக வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்ளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முண்டக்கை ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்த நிலையில், தற்பொழுது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலம் வழியாக  2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்க்கப் பார்க்கப்

பதற்றம் தருகிறது

கேரளத்தின் நிலச்சரிவால்

நேர்ந்த நெடுந்துயரம்


இருந்த வீடுகளே

இடுகாடுகளானதில்

இந்திய வரைபடத்திலிருந்தே

சில கிராமங்கள்

இல்லாமல் போய்விட்டன


அது ஜலசமாதியா

நிலச் சமாதியா என்று

சொல்லத் தெரியவில்லை


பிணமாகிப் போனவர்களின்

கடைசிநேரத் துடிப்பு

என் உடலில் உணரப்படுகிறது


மனிதனுக்கு எதிராக

இயற்கை போர்தொடுத்தது

என்றும் சொல்லலாம்


இயற்கைக்கு எதிராக

மனிதன் தொடுத்த போரின்

பின்விளைவு என்றும் சொல்லலாம்


மலைகளை மழித்தல்

காடுகளை அழித்தல்

நதிகளைக் கெடுத்தல்

எல்லாம் கூடி

மனிதர்களைப்

பழிவாங்கியிருக்கின்றன


புவி வெப்பத்தால்

பைத்தியம்பிடித்த வானிலை

இன்னும் இதுபோல்

செய்யக்கூடும்


மனிதர்களும் அரசுகளும்

விழிப்போடிருத்தல் வேண்டும்


மூச்சுக் குழாயில்

மண் விழுந்து 

போனவர்க்கெல்லாம்

என் கண்விழுந்த கண்ணீரில்

அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்