கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!

Feb 14, 2025,03:00 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


காதலில் நித்தம் புனிதம் வேண்டும் .!

கபடங்கள் இல்லா தோழமை வேண்டும்.!

கண்ணியம் நிறைந்த காதல் வேண்டும்.!

காமம் கலக்காத காதல் வேண்டும்..!!


விழிகளில் கண்ணியம் காக்க வேண்டும்.!

அன்பின் வழியில் அக்கறை வேண்டும் .!

ஆணவம் இல்லா அன்பு வேண்டும்.!

 உணர்வினை மதிக்கும் மனம் வேண்டும்.!!




நேசம் கொண்ட புரிதல் வேண்டும் .!

நேர்மை கொண்ட வழித்துணை வேண்டும் .!

புரிந்து பழக நல்ல நட்பு வேண்டும்..!

மரணம்வரை காதல்செய்யும் மனம் வேண்டும்.!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

Happy Mother's Day: அன்னையர் தினம்.. தியாகத்தையும் அன்பையும் கெளரவிக்கும் நாள்!

news

தந்தைக்கு ஓர் மடல்.. என் தந்தையே... என் விந்தையே...!

news

என்றாலும் முடியும்!

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்