சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே மிகப் பழமையான மற்றும் பெரிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இதன் பெயர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என்ற விருதையும் இது பெற்றுள்ளது நினைவிருக்கலாம். வண்டலூரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அரிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களும் உள்ளன.
இந்த பூங்காவில் குழந்தைகள் பார்க், இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், மீன்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைய பெற்றுள்ளன. இதனை கண்டு ரசிப்பதற்காக தினசரி 2000 முதல் 3000 வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர்.
பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகன வசதிகளும் உள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்க நபருக்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், புத்தண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31 பூங்கா திறந்திருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அன்றைய தினம் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும் செவ்வாய்கிழமை டிசம்பர் 31ஆம் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறகென்னப்பா.. புளியோதரையுடன் கிளம்பிப் போய் புலி சிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்துட்டு வாங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!
{{comments.comment}}