New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!

Dec 28, 2024,06:49 PM IST

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.


நாட்டிலேயே மிகப் பழமையான மற்றும் பெரிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இதன் பெயர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என்ற விருதையும் இது பெற்றுள்ளது நினைவிருக்கலாம். வண்டலூரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அரிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களும் உள்ளன.




இந்த பூங்காவில் குழந்தைகள் பார்க், இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம்,  மீன்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைய பெற்றுள்ளன. இதனை கண்டு ரசிப்பதற்காக தினசரி 2000 முதல் 3000 வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர். 


பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகன வசதிகளும் உள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்க நபருக்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


வண்டலூர் பூங்காவுக்கு  வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், புத்தண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31 பூங்கா திறந்திருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.  ஆனால் அன்றைய தினம் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 


தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும் செவ்வாய்கிழமை டிசம்பர்  31ஆம் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிறகென்னப்பா.. புளியோதரையுடன் கிளம்பிப் போய் புலி சிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்துட்டு வாங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

news

Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை

news

போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

news

இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

அதிகம் பார்க்கும் செய்திகள்