சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே மிகப் பழமையான மற்றும் பெரிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இதன் பெயர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என்ற விருதையும் இது பெற்றுள்ளது நினைவிருக்கலாம். வண்டலூரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அரிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களும் உள்ளன.
இந்த பூங்காவில் குழந்தைகள் பார்க், இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், மீன்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைய பெற்றுள்ளன. இதனை கண்டு ரசிப்பதற்காக தினசரி 2000 முதல் 3000 வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர்.
பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகன வசதிகளும் உள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்க நபருக்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், புத்தண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31 பூங்கா திறந்திருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அன்றைய தினம் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும் செவ்வாய்கிழமை டிசம்பர் 31ஆம் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறகென்னப்பா.. புளியோதரையுடன் கிளம்பிப் போய் புலி சிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்துட்டு வாங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}