சென்னை டூ நெல்லை வரை.. வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்?

Sep 04, 2023,04:42 PM IST
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் அதி வேக ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் வர்ணிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வேகமாகவும் பயணிகளை விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு 2019 ஜனவரி 27ஆம் தேதிதான் வந்தே பாரத் விரைவு ரயில் என பெயரிடப்பட்டது. முதல் சோதனை ஓட்டம் டெல்லி -வாரணாசி இடையே நடந்தது. 



சென்னை  ஐ.சி.எப்பில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 26 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை, சென்னை -மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் காசர்கோடு- திருவனந்தபுரம் இடையே தினமும் தலா ஒரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களின் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை -திருப்பதி மற்றும் எழும்பூர்- நெல்லை இடையே தினசரி வந்தே பாரத் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதலை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

31-வது வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த ரயில் மங்களூர் -பாலக்காடு அல்லது சென்னை -மங்களூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத்  ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த ரயில் பாதையில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ரயிலின் வேகத்தை  தாங்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிவடைந்ததும், அனேகமாக நவம்பர் மாதத்தில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்