சென்னை டூ நெல்லை வரை.. வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்?

Sep 04, 2023,04:42 PM IST
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் அதி வேக ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் வர்ணிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வேகமாகவும் பயணிகளை விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு 2019 ஜனவரி 27ஆம் தேதிதான் வந்தே பாரத் விரைவு ரயில் என பெயரிடப்பட்டது. முதல் சோதனை ஓட்டம் டெல்லி -வாரணாசி இடையே நடந்தது. 



சென்னை  ஐ.சி.எப்பில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 26 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை, சென்னை -மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் காசர்கோடு- திருவனந்தபுரம் இடையே தினமும் தலா ஒரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களின் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை -திருப்பதி மற்றும் எழும்பூர்- நெல்லை இடையே தினசரி வந்தே பாரத் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதலை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

31-வது வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த ரயில் மங்களூர் -பாலக்காடு அல்லது சென்னை -மங்களூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத்  ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த ரயில் பாதையில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ரயிலின் வேகத்தை  தாங்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிவடைந்ததும், அனேகமாக நவம்பர் மாதத்தில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்