வாரணாசி: வாரணாசி - புது டெல்லி இடையிலான 2வது வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டிருந்த இந்திய ரயில்வே, கடைசியில் என்ன நினைத்ததோ, பழைய வந்தே பாரத் ரயில் போலவே நீல, வெள்ளை நிற ரயிலேயே அங்கு இயக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி, வாரணாசி இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த நிலையில் 2வது வந்தே பாரத் ரயிலை நேற்று அறிமுகப்படுத்தியது. இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வாரணாசி தொகுதியின் எம்.பியாகவும் பிரதமர் மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த 2வது வந்தே பாரத் ரயில் குறித்த புகைப்படங்களை முன்பு வெளியிட்டிருந்தது ரயில்வே. பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த பிரவுச்சர்களில், ரயிலின் நிறம் வழக்கமான வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இல்லாமல் காவி மற்றும் கிரே நிறத்தில் இருந்தது. இது விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது.
ஆனால் நேற்று அறிமுகமான ரயில் வழக்கமான நிறத்திலேயே இருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், வந்தே பாரத் ரயில்களின் நிறத்தை காவி மற்றும் கிரே நிறத்தில் மாற்றும் திட்டம் உள்ளது. அந்தப் பெட்டிகள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. பெட்டிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. எனவேதான் வழக்கமான நிறத்திலான பெட்டிகள் தற்போது இயக்கப்படுகின்றன என்று விளக்கினார்.
ஏற்கனவே காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே கடந்த செப்டம்பர் 24ம் தேதி ஒரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயில் காவி மற்றும் கிரே நிறத்திலான பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறத்தையே அனைத்து ரயில்களுக்கும் அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இது காவியைப் புகுத்தும் திட்டம் என்று பலரும் விமர்சித்து வருவது நினைவிருக்கலாம்.
அப்போது இதுகுறித்து தெளிவுபடுத்திய, ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்தான் மனித கண்களுக்கு தெளிவாகத் தெரியக் கூடியதாகும். ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் ஆரஞ்சு, மஞ்சள் காம்பினேஷனில்தான் இருக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2வது வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயிலானது, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். வாரணாசியிலிருந்து காலை 6 மணிக்குக் கிளம்பி பிற்பகல் 2.05 மணிக்கு டெல்லியை சென்றடையும். மறுமார்க்கத்தில் 3 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு வாரணாசியை சென்று சேரும்.
முதல் வந்தே பாரத் ரயில் டெல்லியிலிருந்து காலை 6 மணிக்குக் கிளம்பி, பிற்பகல் 2 மணிக்கு வாரணாசி வந்து சேரும். மறுமார்க்கத்தில் 3 மணிக்கு வாரணாசியிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு டெல்லி போய்ச் சேரும். இந்த ரயிலானது, வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}