ஃபெஞ்சல் புயலால் வந்த பெரு மழையால்.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

Dec 02, 2024,01:35 PM IST

சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 


ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறின. இந்த மழை நீர் அனைத்து இடங்களிலும் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 




விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரையில் 50.3 செ.மீட்டர் மழையும், அரூரில் 33.1 செ.மீட்டர் மழையும், சேலம் ஏற்காடு பகுதியில் 23.9 செ.மீட்டர் மழையும், திருவண்ணாமலையில் 22.3 செ.மீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சென்னை- திருச்சி ரயில் பாதை  முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதுமட்டும் இன்றி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கி இருப்பதால், வாகனங்கள் ஒருவழிப்பாதையில்  திருப்பி விடப்பட்டன.  சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர்  சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுவும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


இந்த பகுதியில் போக்குவரத்தை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் தற்பொழுது மீட்பு மற்றும் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்

news

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை... தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு

news

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

news

ஐப்பசி பெளர்ணமி.. சிவபெருமானுக்கு கூடுதல் சிறப்பு.. கார்த்திகை பெளர்ணமிக்கு நிகரானது!

news

உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்