சென்னை : தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகையான சௌகார் ஜானகி (94), மூச்சுத் திணறல் உள்ளிட்ட வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் அதிகரித்து உடல்நிலை சீரற்றதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரது ஆரோக்கியத்தைக் கண்காணித்து வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவரது மறைவு தென்னிந்திய திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏழு தசாப்த கால திரைப் பயணம்:

1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான 'ஷாவுகாரு' (Shavukaru) என்ற தெலுங்குத் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அப்படத்தின் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என்று அழைக்கப்படலானார். 1952-இல் 'வலையாபதி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, புகழ்பெற்ற இயக்குநர் கே. பாலசந்தரின் 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'இரு கோடுகள்', 'காவியத் தலைவி', 'தில்லு முல்லு' போன்ற பல முக்கியத் திரைப்படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பு ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது. 'உயர்ந்த மனிதன்', 'புதிய பறவை', 'பணம் படைத்தவன்' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர் செளகார் ஜானகி.
கமல்ஹாசனின் 'ஹே ராம்' மற்றும் சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' உள்ளிட்ட நவீன காலத் திரைப்படங்களிலும் இவர் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தார். சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்த இவர், இந்திய சினிமாவுக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
இது காதலா?
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
மதுரையின் மையம்!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
{{comments.comment}}