சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்திற்கு இந்த வருடம் 2 தீபாவளி வருகிறது.. முதல் தீபாவளியை ஜூன் மாதம் கொண்டாடுகிறது. கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் இந்தியன் 2. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக நேற்றுதான் அறிவித்தது லைக்கா நிறுவனம்.
இந்த நிலையில் இன்று அடுத்த தீபாவளிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம். அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகையன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது லைக்கா. ஜெய்பீம் படத்தை இயக்கி த.செ. ஞானவேல் இயக்கியுள்ள படம்தான் வேட்டையன். இப்படத்தை தீபாவளியன்று திரையிடவுள்ளதாக லைக்கா தெரிவித்துள்ளது.
இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படு வேகமாக வே்ட்டையன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் கதை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது லைக்கா.
வேட்டையன் படத்தில் ராணா, பஹத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வேட்டையன் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் சந்தித்துப் பேசிக் கொண்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இந்த வருடம் கமல் மற்றும் ரஜினியின் சூப்பர் ஹிட் எதிர்பார்ப்புப் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. அதுவும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகளில் இரு சூப்பர் நடிகர்களும் நடித்து அது வெளியாவது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}