சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்திற்கு இந்த வருடம் 2 தீபாவளி வருகிறது.. முதல் தீபாவளியை ஜூன் மாதம் கொண்டாடுகிறது. கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் இந்தியன் 2. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக நேற்றுதான் அறிவித்தது லைக்கா நிறுவனம்.

இந்த நிலையில் இன்று அடுத்த தீபாவளிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம். அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகையன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது லைக்கா. ஜெய்பீம் படத்தை இயக்கி த.செ. ஞானவேல் இயக்கியுள்ள படம்தான் வேட்டையன். இப்படத்தை தீபாவளியன்று திரையிடவுள்ளதாக லைக்கா தெரிவித்துள்ளது.
இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படு வேகமாக வே்ட்டையன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் கதை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது லைக்கா.

வேட்டையன் படத்தில் ராணா, பஹத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வேட்டையன் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் சந்தித்துப் பேசிக் கொண்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இந்த வருடம் கமல் மற்றும் ரஜினியின் சூப்பர் ஹிட் எதிர்பார்ப்புப் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. அதுவும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகளில் இரு சூப்பர் நடிகர்களும் நடித்து அது வெளியாவது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது.
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}