டெல்லி : குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டில்லியில் வெளியிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் ஆலோசனைகள் சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களால் நடத்தப்பட்டது.

பாஜக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டுக்காரர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜக.,விற்கு நெருக்கடி கொடுக்க மற்றொரு தமிழ்நாட்டுக்காரரை காங்கிரஸ் தலைமை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மயில்சாமி அண்ணாதுரை, திருச்சி சிவா, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரின் பெயர்கள் மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 79 வயதாகும் பி.சுதர்சன ரெட்டி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2007 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். முதல் கோவா லோக்ஆயுக்தா தலைவராக பொறுப்பு வகித்த இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக 2013ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}