விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

Sep 13, 2025,05:14 PM IST

திருச்சி: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் பிரச்சாரம் இன்று தொடங்கவுள்ள நிலையில் அவரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களால் அந்தப் பகுதியே திணறிப் போனது. 


விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்யை வரவேற்கத் திரண்டதால் அந்தப் பகுதி முழுக்க தவெகவினர் மயமாக் காணப்பட்டது. முன்னதாக சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார் விஜய்.




அதன் பின்னர் அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரச்சார பேருந்தில் ஏறி திருச்சியில் தனது முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ள மரக்கடை பகுதி நோக்கிக் கிளம்பினா். ஆனால் பஸ்ஸால் சுமூகமாகப் போக முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்துதான் பஸ் போக முடிகிறது. அந்த அளவுக்கு வழியெங்கும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு விஜய்யை கிட்டத்தட்ட ஊர்வலம் போல கூட்டிச் செல்கின்றனர்.


ரோடுஷோ போகக் கூடாது என்பது காவல்துறை விதித்துள்ள ஒரு நிபந்தனை. ஆனால் தற்போது ரோடுஷோ போலத்தான் விஜய்யை அவரது கட்சித் தொண்டர்கள் கூட்டிச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு பல ஆயிரம் பேர் திரண்டு உள்ளனர். ஏற்கனவே மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கில் விஜய் பேச்சை கேட்க தொண்டர்கள் திரண்டுக் காத்துள்ளனர். வழியெங்கிலும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருப்பதால் திருச்சியே திணறிப் போய்க் காணப்படுகிறது.




விஜய் குறிப்பிட்ட நேரத்துக்குள் மரக்கடைக்கு வந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது. 

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருச்சியில் கிட்டத்தட்ட மினி மாநாடு நடக்கிறதோ என்ற உணர்வு ஏற்படும் அளவுக்கு தவெகவினர் பெரும் எழுச்சியுடன் கூடிக் காணப்படுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்