சென்னை: இது மகனுக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால் என புதுப்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பார்த்து கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஓதுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னதாக இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். கலைஞர் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த நினைவிடத்தை பார்த்துவிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:
கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது மகனுக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்
உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}