- கலைவாணி கோபால்
சென்னை: சென்னையில் ஜனவரி 1, 2026 ஆங்கில புத்தாண்டு வருவதை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், எப்போதும் புத்தாண்டு என்றாலே அனைவரும் மனதிலும் வருவதும் மெரினா கடற்கரைதான். இதில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வழக்கம். இந்த வருடமும் அதேபோல செய்யப்பட்டுள்ளன.
என்னவெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்

கடற்கரை காமராஜர் சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை உட்புறச் சாலைகளில் ஏழு மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுவாமி விவேகானந்தா சாலை தீவுத்திடல் மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதைத்தொடர்ந்து அடையார் மற்றும் காமராஜர் சாலை செல்லும் வழிகளில் வாகனங்கள் செல்லாமல் கிரீன்வேஸ் சாலை மந்தைவெளி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்து துறை இத்தகைய வழித்தட மாற்றங்களை அறிவித்துள்ளது.
மெரீனா கடற்கரை மட்டுமல்லாமல் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதால் அங்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
NATIONAL TELL A JOKE DAY.. "WIFE..ன்னா என்ன தெரியுமாங்க?"
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
எளிதில் மந்திரியாக எளிய வழி!
கவிதை வராவிட்டாலும் எழுது
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கடவுள் ஏன் கல்லானார்?
கண்தானம்!
Sunday Short story: எதார்த்தம்!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
{{comments.comment}}