அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

Sep 10, 2025,10:57 AM IST

சென்னை :  அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் கலகக் குரல் எழுப்பியதால் அவரின் கட்சி பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் டில்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்தித்து விட்டு வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்து மீண்டும் பரபரப்பை கிளப்பினார். 


செங்ஙகோட்டையன் அமித்ஷாவை சென்று பார்த்தது தான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் டில்லி பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாக சொல்லி விட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதலில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கும் போது, தான் செங்கோட்டையனை சந்தித்தால் அது கட்சியின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை போல் ஆகி விடும் கூறி, செங்கோட்டையனை சந்திக்க மறுத்து விட்டாராம் நிர்மலா சீதாராமன். அதன் பிறகு தான் அமித்ஷாவை சந்திக்க செங்கோட்டையன் அனுமதி கேட்டுள்ளார்.


ஆனால் தற்போது, இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்தில் நடந்து வரும் கிளர்ச்சி காரணமாக அது தொடர்பான பாதுகாப்பு வேலைகளில் அமித்ஷா பிஸியாக இருந்ததால் செங்கோட்டையனை அமித்ஷா சார்பாக அவரது பிரதிநிதி தான் சந்தித்து பேசி உள்ளாராம். அவரிடம் தான் செங்கோட்டையன் தனது மனதில் உள்ள குமுறல்களை கொட்டி உள்ளாராம்.




தனக்கு சாதமாக பாஜக மேலிடம் ஏதாவது முடிவு செய்யும் என டில்லி சென்ற செங்கோட்டையனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளதாம். காரணம், செங்கோட்டையனை சந்தித்த அமித்ஷாவின் பிரதிநிதி, "கொஞ்சம் பொறுமையாக, அமைதியாக இருங்கள். பாஜக மேலிடம் தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழலை தொடர்ந்து கவனித்து வருகிறது. தற்போது பாஜக.,வின் முழு கவனமும் டிசம்பரில் பீகாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தான் உள்ளது. அதை முடித்த பிறகு டிசம்பரில் தமிழகத்தின் மீது பாஜக.,வின் முழு கவனமும் விழ உள்ளது. அதுவரை நீங்கள் கலக குரல் ஏதும் எழுப்பாமல், அவசரப்படாமல் இருங்கள். நாங்கள் அதிமுக.,விடம் பேசி உங்களுக்கு வேண்டியதை செய்ய சொல்கிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளாராம்.


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக என பல வழிகளிலும் கூட்டணியில் தங்களின் கையை ஓங்க வைக்க பாஜக ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து விட்டது. மற்ற மாநிலங்களில் செய்ததை போல் அதிமுக.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியை உடைத்தால் அது தங்களுக்கு தான் பாதமாக அமையும் என பாஜக மேலிடம் தெரிந்து கொண்டுள்ளது. தற்போது அதிமுக.,வை பகைத்தால் 2021, 2024 தேர்தலில் நடந்தது போன்ற முடிவை 2026ல் மட்டுமின்றி 2029லும் பெற வேண்டி இருக்கும் என நன்கு யோசித்த பிறகு தான் அதிமுக தலைமையை ஏற்று, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அமித்ஷாவே நேரில் வந்து அறிவித்து விட்டு சென்றுள்ளாராம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்