- ந. மகாலட்சுமி
போகித் திருநாள்
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்,
பழையன கழிக்கும் பாங்குடன் தோன்றி,
அகத்தின் இருளைப் புறத்தே தள்ளி,
புதியன புகுத்தும் பொன்னாள் இதுவே!
கூரை வேய்ந்த குடிசை எங்கும்,
காப்புக்கட்டு கொண்டு காவல் பூண,
எரிக்கும் தீயில் ஈரம் தீர,
குளிர்ச்சி நீங்கி ஒளிதான் பெருக!

சிறுபீளை பூவும் ஆவாரங் கொத்தும்
மருந்தென மாறி வாசலில் நிற்க,
வேப்பிலை சூடி வினைப்பகை ஓட்டி
வேந்தன் இந்திரன் வியப்படையச் செய்வோம்!
போகிப் பறைமுழங்கப் புத்துயிர் பொங்க
புகையினில் கருகட்டும் பொல்லாச் சூது!
நகையினில் மலரட்டும் நல்லோர் உள்ளம்
நலிவுகள் தீர்ந்து நலங்கள் சூழ!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்"
நன்னூலார் சொன்ன நன்மொழி கொண்டு,
மனத்தின் அழுக்கை மாய்த்து அழித்து,
மங்கலத் தையினை வரவேற்போம் வாரீர்!
கதிரவன் தேரோட்டம் வடக்கு நோக்கித் திரும்ப
வீதி எங்கும் கோலம் இடுவோம்!
(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}