- ந. மகாலட்சுமி
போகித் திருநாள்
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்,
பழையன கழிக்கும் பாங்குடன் தோன்றி,
அகத்தின் இருளைப் புறத்தே தள்ளி,
புதியன புகுத்தும் பொன்னாள் இதுவே!
கூரை வேய்ந்த குடிசை எங்கும்,
காப்புக்கட்டு கொண்டு காவல் பூண,
எரிக்கும் தீயில் ஈரம் தீர,
குளிர்ச்சி நீங்கி ஒளிதான் பெருக!

சிறுபீளை பூவும் ஆவாரங் கொத்தும்
மருந்தென மாறி வாசலில் நிற்க,
வேப்பிலை சூடி வினைப்பகை ஓட்டி
வேந்தன் இந்திரன் வியப்படையச் செய்வோம்!
போகிப் பறைமுழங்கப் புத்துயிர் பொங்க
புகையினில் கருகட்டும் பொல்லாச் சூது!
நகையினில் மலரட்டும் நல்லோர் உள்ளம்
நலிவுகள் தீர்ந்து நலங்கள் சூழ!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்"
நன்னூலார் சொன்ன நன்மொழி கொண்டு,
மனத்தின் அழுக்கை மாய்த்து அழித்து,
மங்கலத் தையினை வரவேற்போம் வாரீர்!
கதிரவன் தேரோட்டம் வடக்கு நோக்கித் திரும்ப
வீதி எங்கும் கோலம் இடுவோம்!
(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை
{{comments.comment}}