மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!

Jan 14, 2026,02:28 PM IST

- ந. மகாலட்சுமி


போகித் திருநாள்

மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்,

பழையன கழிக்கும் பாங்குடன் தோன்றி,

அகத்தின் இருளைப் புறத்தே தள்ளி,

புதியன புகுத்தும் பொன்னாள் இதுவே!

கூரை வேய்ந்த குடிசை எங்கும்,

காப்புக்கட்டு கொண்டு காவல் பூண,

எரிக்கும் தீயில் ஈரம் தீர,

குளிர்ச்சி நீங்கி ஒளிதான் பெருக!




சிறுபீளை பூவும் ஆவாரங் கொத்தும்

மருந்தென மாறி வாசலில் நிற்க,

வேப்பிலை சூடி வினைப்பகை ஓட்டி

வேந்தன் இந்திரன் வியப்படையச் செய்வோம்!

போகிப் பறைமுழங்கப் புத்துயிர் பொங்க

புகையினில் கருகட்டும் பொல்லாச் சூது!

நகையினில் மலரட்டும் நல்லோர் உள்ளம்

நலிவுகள் தீர்ந்து நலங்கள் சூழ!

"பழையன கழிதலும் புதியன புகுதலும்"

நன்னூலார் சொன்ன நன்மொழி கொண்டு,

மனத்தின் அழுக்கை மாய்த்து அழித்து,

மங்கலத் தையினை வரவேற்போம் வாரீர்!

கதிரவன் தேரோட்டம் வடக்கு நோக்கித் திரும்ப

கவலைகள் எல்லாம் கனலாய் எரிய,

விடியும் தையில் வினைகள் தீர

வீதி எங்கும் கோலம் இடுவோம்! 


(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்