டெல்லி : ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக புறக்கணிக்கிறார்கள் என்பதையும் அந்த அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்லாமல் சமாஜ்வாடிக் கட்சியும் தற்போது இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தால், ராமர் கோவில் விழா கிட்டத்தட்ட பாஜக கூட்டணியின் விழாவாக தோற்றமளிக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் ரூ.18,000 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு நாட்டில் உள்ள 6000 க்கும் அதிகமான விஐபி.,க்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, அதிர்ரஞ்சன் செளத்ரி ஆகியோருக்கு கடந்த மாதம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ராமரை நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அயோத்தி ராமர் கோவிலை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நீண்ட காலமாக அரசியல் திட்டமாக மாற்றி உள்ளது. தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிகள் தங்களின் தேர்தல் ஆதாயத்திற்காக தான் அவசர அவசரமாக திறக்கிறார்கள்.
2019ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பையும், கோடிக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கையையும், மத உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக.,வின் அரசியல் நிகழ்ச்சியாக இது நடத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி இதனை புறக்கணிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சியும் புறக்கணிப்பு
இதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக முக்கியக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியுமான சமாஜ்வாடிக் கட்சியும் இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பாஜக ராமரை வைத்து அரசியல் செய்கிறது. இதில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை துவக்க திட்டமிட்டுள்ள மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள palace ground பகுதியில் யாத்திரை நடத்த அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் யாத்திரை நடந்தே தீரும் என காங்கிரசின் வேணுகோபால் உறுதியாக தெரிவித்துள்ளார்.
யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்ததால் அம்மாநில முதல்வர் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தும் வருகிறது. இதனால் ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}