அகமதாபாத் : ஐபிஎல் 2025 பைனல் இன்று (ஜூன் 03) அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இதில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி டுவென்டி கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பஞ்சாப் அணியும் அவர்களுக்கு ஈடு கொடுக்க பீல்டிங்கை கடுமையாக்கி வருகிறது.
பெங்களூ-பஞ்சாப் இரண்டில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும் பெங்களூரு அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவும் பெங்களுரு அணிக்கே அதிகம் இருந்து வருகிறது. பெங்களுரு அணிக்கு ஆதரவுகள் பெருக விராத் கோஹ்லி முக்கியமான காரணம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராத் பெறுவதற்கு இன்னும் 86 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். இன்றைய போட்டியில் அவர் எடுக்கும் பட்சத்தில் அந்த வரலாற்று சாதனையை அவர் எட்டுவார்.
அதோடு பெங்களூரு அணியின் ஐபிஎல் வரலாறு தான் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்க காரணம். 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவி ல் நடந்து வருகிறது. இதில் இது வரை சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. இந்த முறை இந்த இரண்டு அணிகளுமே முன்பே போட்டியில் இருந்து வெளியேறி விட்டன. இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாத பெங்களூரு- பஞ்சாப் அணிகள் தான் தற்போது பைனல் போட்டியில் களம் இறங்க உள்ளன. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இரண்டு அணிகளை ஒப்பிட்டு பார்த்தால் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரு முறை மட்டுமே பைனலுக்கு சென்றுள்ளது. அதே சமயம் பெங்களுரு அணி 3 முறை பைனலில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதில் 2011ம் ஆண்டு சென்னைக்கு எதிரான போட்டி தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் தலா 6, 8 என்ற ரன்கள் வித்தியாசத்திலேயே கோப்பையை இழந்துள்ளது. அதே போல் 2014 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கோல்கத்தா அணியிடம் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்திலேயே கோப்பையை பறிகொடுத்தது பஞ்சாப் அணி.
இரண்டு அணிகள் தற்போதைய போட்டியில் மட்டுமல்ல ஐபிஎல் வரலாற்று பின்னணியிலும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியும் கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இதில் கோப்பையை வெல்லப் போவது ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற பெங்களுரு அணியா அல்லது பஞ்சாப் அணியா என்பதை பார்க்கலாம்.
இதைச் செய்தால்தான் சமரசம்.. டாக்டர் ராமதாஸ் போட்ட 3 கன்டிஷன்.. ஏற்பாரா அன்புமணி ராமதாஸ்?
அதிரடி எம்.பி. மஹுவா மொய்த்ரா திடீர் திருமணம்.. முன்னாள் பிஜேடி எம்.பியை ரகசியமாக மணந்தார்!
விஜய்நிகழ்ச்சியில் பங்கேற்கும்.. பெண்குழந்தைகளை பெற்றவர்கள் முட்டாள்கள்.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு
குதிரை உதாரணம் ஏன்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்.. ஆடி போயிருக்கும் காங்கிரஸ் சீனியர்கள்!
இது எல்லா இடங்களிலும் நடப்பது தான்... பெங்களூரு சம்பவம் பற்றி சித்தராமைய்யா கருத்து
Thuglife Review: கமல்ஹாசன் -சிம்புவின் தக் லைஃப் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா?
ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை... நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!
அறுபதிலும் ஆசைகள் வரும்!
செக்கச் சிவந்த அழகே.. மருதாணி !
{{comments.comment}}