IPL 2025 final: பெங்களுரு அணிக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிவது ஏன்?

Jun 03, 2025,08:03 PM IST

அகமதாபாத் : ஐபிஎல் 2025 பைனல் இன்று (ஜூன் 03) அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இதில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.


கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி டுவென்டி கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பஞ்சாப் அணியும் அவர்களுக்கு ஈடு கொடுக்க பீல்டிங்கை கடுமையாக்கி வருகிறது.


பெங்களூ-பஞ்சாப் இரண்டில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும் பெங்களூரு அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவும் பெங்களுரு அணிக்கே அதிகம் இருந்து வருகிறது. பெங்களுரு அணிக்கு ஆதரவுகள் பெருக விராத் கோஹ்லி முக்கியமான காரணம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராத் பெறுவதற்கு இன்னும் 86 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். இன்றைய போட்டியில் அவர் எடுக்கும் பட்சத்தில் அந்த வரலாற்று சாதனையை அவர் எட்டுவார்.




அதோடு பெங்களூரு அணியின் ஐபிஎல் வரலாறு தான் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்க காரணம். 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவி ல் நடந்து வருகிறது. இதில் இது வரை சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.  இந்த முறை இந்த இரண்டு அணிகளுமே முன்பே போட்டியில் இருந்து வெளியேறி விட்டன. இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாத பெங்களூரு- பஞ்சாப் அணிகள் தான் தற்போது பைனல் போட்டியில் களம் இறங்க உள்ளன. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


இரண்டு அணிகளை ஒப்பிட்டு பார்த்தால் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரு முறை மட்டுமே பைனலுக்கு சென்றுள்ளது. அதே சமயம் பெங்களுரு அணி 3 முறை பைனலில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதில் 2011ம் ஆண்டு சென்னைக்கு எதிரான போட்டி தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் தலா 6, 8 என்ற ரன்கள் வித்தியாசத்திலேயே கோப்பையை இழந்துள்ளது. அதே போல் 2014 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கோல்கத்தா அணியிடம் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்திலேயே கோப்பையை பறிகொடுத்தது பஞ்சாப் அணி. 


இரண்டு அணிகள் தற்போதைய போட்டியில் மட்டுமல்ல ஐபிஎல் வரலாற்று பின்னணியிலும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியும் கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இதில் கோப்பையை வெல்லப் போவது ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற பெங்களுரு அணியா அல்லது பஞ்சாப் அணியா என்பதை பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்