Short story: அவசரம் எதற்கு?

Jun 05, 2026,03:21 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


"சர்" என்று  வேகமாய் பாய்ந்து சென்றது ஒரு ஸ்கூட்டர். தொடர்ந்து சென்றது சிவப்பு நிற ஆடி காரும்; வெள்ளை மாருதியும்.


"இரு! அவசரப்படாதே இந்த அதிகாலையில் வாகன ஓட்டிகள் தாறு மாறாக ஓட்டிக் கொண்டு போவார்கள்" என்று சொன்னார்  பெருச்சாளியார், தம் இணையிடம்.


இந்த இணை, வீதியை குறுக்காக கடக்கும் முன்பே;பெரிய சப்தமும், அழுகுரலும். அப்பகுதியில் எதிரொலித்தது தெருவைக் கடக்க முயன்ற பால்கார கிழவி மேல் ஸ்கூட்டர் மோத; அதை  விரைவாக முந்தி போகும் முயற்சியில் இரு கார்களும் தடுப்புச்சுவரின் மேல் மோதி நின்றிருந்தன.




"உயிர் சேதம் போல; பார்த்துப் போக வேண்டாமா", என்பது போல் ஒருவரையொருவர்  பார்த்துக்கொண்டு, வேகமாக பாலத்துக்கடியில் ஓடி மறைந்தன, தப்பித்த இரு ஜீவன்களும்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

அதிகம் பார்க்கும் செய்திகள்