- சசிகலா விஸ்வநாதன்
"சர்" என்று வேகமாய் பாய்ந்து சென்றது ஒரு ஸ்கூட்டர். தொடர்ந்து சென்றது சிவப்பு நிற ஆடி காரும்; வெள்ளை மாருதியும்.
"இரு! அவசரப்படாதே இந்த அதிகாலையில் வாகன ஓட்டிகள் தாறு மாறாக ஓட்டிக் கொண்டு போவார்கள்" என்று சொன்னார் பெருச்சாளியார், தம் இணையிடம்.
இந்த இணை, வீதியை குறுக்காக கடக்கும் முன்பே;பெரிய சப்தமும், அழுகுரலும். அப்பகுதியில் எதிரொலித்தது தெருவைக் கடக்க முயன்ற பால்கார கிழவி மேல் ஸ்கூட்டர் மோத; அதை விரைவாக முந்தி போகும் முயற்சியில் இரு கார்களும் தடுப்புச்சுவரின் மேல் மோதி நின்றிருந்தன.

"உயிர் சேதம் போல; பார்த்துப் போக வேண்டாமா", என்பது போல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, வேகமாக பாலத்துக்கடியில் ஓடி மறைந்தன, தப்பித்த இரு ஜீவன்களும்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
Closed doors are considered bliss sometimes .. கதவுகள் மூடினால் கவலைப்படாதீர்கள்!
Time is borrowed.. காலம் என்பது நமக்குக் கடனாக கிடைத்தது.. சரியாக பயன்படுத்துங்க!
A Teacher’s Journey Through Election Duty
யாரை நம்பலாம்!
Short story: அவசரம் எதற்கு?
சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!
Tamil Short story: முற்பகல் செய்யின்!
உன்னுடன் என் கடைசி இரவு!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
{{comments.comment}}