கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

Oct 13, 2025,05:19 PM IST

சென்னை: கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன்?  என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


கரூரில் 41 பேர் இறந்தது தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இனி சிபிஐ விசாரிக்கும். ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலையிலான 3 பேர் கொண்ட குழு இந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்கும். இந்தக் குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரானது. அதனை எப்போதும் ஒரு அவமதிப்பாக பார்க்கிறேன்.




எங்களுடைய காவல் துறை விசாரணையில் என்ன குறை. அரசு தோல்வியை ஒத்துக்கொள்கிறதா? சிபிஐயில் இருக்கும் அதிகாரிகளுக்கு 2 அல்லது 3 மூளைகள் உள்ளதா?இத்தனை ஆண்டுகளில் சிபிஐ வசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது. சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள்.


சிபிஐ விசாரணை என்பது காலத்தை கடத்தி விடுவதும், அதனை மறக்கடித்து வேறு பக்கம் திருப்பி விடுவது தான். 2 மாதத்தில் விசாரணையை முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யுமா?. இப்போதகைக்கு விசாரணை சிபிஐயிடம் இருக்கிறது. அதனால நாம் ஒன்றும் பேச முடியாது. இது ஒரு தேச அவமதிப்பு. மாநில அவமதிப்பு. தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

சென்னை தமிழாசிரியைக்கு குரு துரோணச்சார்யா விருது.. புதுச்சேரி விழாவில் கெளரவம்

news

கொள்ளை (சிறுகதை)

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

நேராகத் தோன்றிடினும்.. அம்பு கொடியது..! (சிறுகதை)

news

நிறைய படிச்சேன்.. எனது பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்கிறேன்.. அசத்தும் சங்கீதா

அதிகம் பார்க்கும் செய்திகள்