2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

Jan 19, 2026,05:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை காலை சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது. 


ஆண்டின் தொடக்க சட்டசபை கூட்டம் வழக்கமாக ஆளுநர் உரையுடன் துவங்குவது மரபாக இருந்தாலும், இம்முறை அந்த உரை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. காரணம் கடந்த காலங்களில் ஆளுநர் ஆர். என். ரவி. பல்வேறு காரணங்களுக்காக ஆளுநர் உரையை முழுமையாக படிக்காத நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




நாளைய கூட்டம் காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆளுநர் உரை இடம்பெற வேண்டிய நடைமுறை இருப்பினும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் காரணமாக இந்த முறையிலும் ஆளுநர் உரை முழுமையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


முன்னதாக நடைபெற்ற சட்டசபை கூட்டங்களில் ஆளுநர் உரை தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் உரை முழுமையாக வாசிக்கப்படாததும், சில அம்சங்கள் தவிர்க்கப்பட்டதுமாக அரசியல் சூழல் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டின் கூட்டத்தொடர் தொடக்க நாளில் ஆளுநர் உரை குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.


இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் முடியப் போகிறது. சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரில் அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள், வளர்ச்சி திட்டங்கள், சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சபையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சட்டசபபைத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆளுநர் உரையில் பல முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு இடம் பெறச் செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் ஆளுநர் இதையெல்லாம் வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனவே ஆளுநர் உரை சுமூகமாக நடைபெறுமா, அல்லது வழக்கமான நடைமுறையில் மாற்றம் ஏற்படுமா என்பதை அரசியல் கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்