பாரீஸ்: பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான வான வேடிக்கையுடன் கோலாகலமாக தூவங்கியது. அப்போது ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கிசான் ஏந்தி சென்றார்.
உலக நாடுகள் முழுவதும் கலந்து கொள்ளும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 26 ஆம் தேதியை ஒலிம்பிக் போட்டிகள் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நள்ளிரவு பாரிஸில் தொடங்கியது. இதையொட்டி நேற்று வண்ணமயமான விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் கண்கவர் நடன நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, வண்ண வண்ண வான வேடிக்கைகள், வண்ணப் புகைகள் என மிகப்பிரமாண்டமாக பாரா ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்றது. அப்போது இந்திய குழுவினர் வெள்ளை ஆடையுடன் தேசியக் கொடியேந்தி வலம் வந்தனர்.
இந்தப் போட்டிகள் இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை அதாவது 11 நாட்கள் நடைபெற உள்ளன. 167 உலக நாடுகளிலிருந்து மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்களும், 52 ஆண்களும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன் தங்கவேல் (சேலம்), துளசிமதி முருகேசன் (காஞ்சிபுரம்), சிவராஜன் சோலைமலை (மதுரை), மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்), நித்திய ஸ்ரீ சுமதி (சென்னை), கஸ்தூரி ராஜாமணி (சென்னை) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கடந்த முறை இந்தியா 5 தங்கம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை அதிக அளவில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்பதால் இந்தியாவிற்கு கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}