பாரீஸ்: பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான வான வேடிக்கையுடன் கோலாகலமாக தூவங்கியது. அப்போது ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கிசான் ஏந்தி சென்றார்.
உலக நாடுகள் முழுவதும் கலந்து கொள்ளும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 26 ஆம் தேதியை ஒலிம்பிக் போட்டிகள் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நள்ளிரவு பாரிஸில் தொடங்கியது. இதையொட்டி நேற்று வண்ணமயமான விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் கண்கவர் நடன நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, வண்ண வண்ண வான வேடிக்கைகள், வண்ணப் புகைகள் என மிகப்பிரமாண்டமாக பாரா ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்றது. அப்போது இந்திய குழுவினர் வெள்ளை ஆடையுடன் தேசியக் கொடியேந்தி வலம் வந்தனர்.
இந்தப் போட்டிகள் இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை அதாவது 11 நாட்கள் நடைபெற உள்ளன. 167 உலக நாடுகளிலிருந்து மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்களும், 52 ஆண்களும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன் தங்கவேல் (சேலம்), துளசிமதி முருகேசன் (காஞ்சிபுரம்), சிவராஜன் சோலைமலை (மதுரை), மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்), நித்திய ஸ்ரீ சுமதி (சென்னை), கஸ்தூரி ராஜாமணி (சென்னை) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கடந்த முறை இந்தியா 5 தங்கம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை அதிக அளவில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்பதால் இந்தியாவிற்கு கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}