சென்னை: காற்றின் வேக மாறுபாடுதான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் சின்னத்தின் வேகம் படு வேகமாக குறைந்து விட்டது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது 3 கிலோமீட்டர் வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இதனால் புயல் சின்னம் பலவீனமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காற்று அதீத வேக மாறுபாட்டைக் காட்டுவதால் ஆழ்ந்த காற்றழுத்தமானது புயலாக மாறுவதற்கும் வலுவடைவதற்கும் பெரும் தடையாக உள்ளது. அப்படியே அது வலுவடைந்தாலும் சற்றே வலுடையக் கூடும். தமிழ்நாட்டுக் கரையை அடையும்போது புயல் சின்னம் மேலும் வலுவடைவதை தடுக்கவும் கூடும். எனவே இது புயலாக மாறினாலும் கூட சக்தி வாய்ந்த புயலாக இருக்காது. லேசான புயலாக மாறி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது மாறி விடும்.
நாளை டெல்டா முதல் சென்னை கடற்கரைகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் 29ம் தேதி முதல் மழை வேகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}