சென்னை: காற்றின் வேக மாறுபாடுதான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் சின்னத்தின் வேகம் படு வேகமாக குறைந்து விட்டது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது 3 கிலோமீட்டர் வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இதனால் புயல் சின்னம் பலவீனமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காற்று அதீத வேக மாறுபாட்டைக் காட்டுவதால் ஆழ்ந்த காற்றழுத்தமானது புயலாக மாறுவதற்கும் வலுவடைவதற்கும் பெரும் தடையாக உள்ளது. அப்படியே அது வலுவடைந்தாலும் சற்றே வலுடையக் கூடும். தமிழ்நாட்டுக் கரையை அடையும்போது புயல் சின்னம் மேலும் வலுவடைவதை தடுக்கவும் கூடும். எனவே இது புயலாக மாறினாலும் கூட சக்தி வாய்ந்த புயலாக இருக்காது. லேசான புயலாக மாறி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது மாறி விடும்.
நாளை டெல்டா முதல் சென்னை கடற்கரைகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் 29ம் தேதி முதல் மழை வேகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!
ஆசையில பாத்திகட்டி!
{{comments.comment}}