சென்னை: காற்றின் வேக மாறுபாடுதான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் சின்னத்தின் வேகம் படு வேகமாக குறைந்து விட்டது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது 3 கிலோமீட்டர் வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இதனால் புயல் சின்னம் பலவீனமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காற்று அதீத வேக மாறுபாட்டைக் காட்டுவதால் ஆழ்ந்த காற்றழுத்தமானது புயலாக மாறுவதற்கும் வலுவடைவதற்கும் பெரும் தடையாக உள்ளது. அப்படியே அது வலுவடைந்தாலும் சற்றே வலுடையக் கூடும். தமிழ்நாட்டுக் கரையை அடையும்போது புயல் சின்னம் மேலும் வலுவடைவதை தடுக்கவும் கூடும். எனவே இது புயலாக மாறினாலும் கூட சக்தி வாய்ந்த புயலாக இருக்காது. லேசான புயலாக மாறி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது மாறி விடும்.
நாளை டெல்டா முதல் சென்னை கடற்கரைகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் 29ம் தேதி முதல் மழை வேகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Asha Bhosle: ஓ பட்டர்பிளை.. நீ பாடிய பாடல்களுக்கு நன்றி.. மறக்க முடியாத செண்பகமே செண்பகமே!
எங்க வீட்டு செல்லக் குட்டி.. செல்லச் சிரிப்பால் சவால்களை தாண்டி.. 3 வயதில்!
Sanju Samson Century: சேப்பாக்கத்தில் சிறப்பான சம்பவம்.. பவுலிங்கிலும் கலக்கிய சிஎஸ்கே!
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
1300 அடியார்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகப் பயணம்!
செங்கற்களாலும்.. சிமென்ட்டாலும் மட்டும் ஆனதல்ல வீடு.. Bharatha Vilas!
நேரமாகி விட்டது.. சீக்கிரம் ரெடியாகி வா.. மெல்லிய பூங்காற்று.. (2)
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
{{comments.comment}}