சென்னை: காற்றின் வேக மாறுபாடுதான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் சின்னத்தின் வேகம் படு வேகமாக குறைந்து விட்டது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது 3 கிலோமீட்டர் வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இதனால் புயல் சின்னம் பலவீனமடைகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காற்று அதீத வேக மாறுபாட்டைக் காட்டுவதால் ஆழ்ந்த காற்றழுத்தமானது புயலாக மாறுவதற்கும் வலுவடைவதற்கும் பெரும் தடையாக உள்ளது. அப்படியே அது வலுவடைந்தாலும் சற்றே வலுடையக் கூடும். தமிழ்நாட்டுக் கரையை அடையும்போது புயல் சின்னம் மேலும் வலுவடைவதை தடுக்கவும் கூடும். எனவே இது புயலாக மாறினாலும் கூட சக்தி வாய்ந்த புயலாக இருக்காது. லேசான புயலாக மாறி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இது மாறி விடும்.
நாளை டெல்டா முதல் சென்னை கடற்கரைகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் 29ம் தேதி முதல் மழை வேகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}