யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

Jul 08, 2025,05:51 PM IST

லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஒரு புகார் வந்துள்ளது. 


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவர் மீது, திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றியதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண், தயாள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனதளவில் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 




இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் BNS பிரிவு 69-ன் கீழ் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 69 என்பது, திருமணம் அல்லது வேலை தருவதாக பொய் சொல்லி பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்கிறது. இது மோசடி மற்றும் சுரண்டல் செயலாகும். இப்படி செய்தால் 10 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். 


காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தயாள் ஐந்து வருடங்களாக தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார். தயாள் தனது குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் தன்னை "மருமகளாக" ஏற்றுக்கொண்டதாகவும், இது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 வருடங்களாக, புகார்தாரர் கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். அந்த நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி, அவரை உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் புகார்தாரரை தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து, கணவன் போல் நடந்து கொண்டார். இதனால் அவர் அவரை முழுமையாக நம்பினார்.


அந்தப் பெண் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். அந்த உறவின்போது, அவர் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுரண்டப்பட்டார். பின்னர், அந்த நபர் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற பொய்யான உறவுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் 14, 2025 அன்று, அந்தப் பெண் பெண்கள் உதவி எண் 181-க்கு போன் செய்தார். ஆனால், காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


மனதளவிலும், சமூக அளவிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், முதலமைச்சரின் அலுவலகம் மூலம் நீதி கேட்டுள்ளார். சாட் பதிவுகள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் அவரிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

இந்திரஜித்!

news

ஒரு மிடறு!

news

Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

news

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?

news

அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்

அதிகம் பார்க்கும் செய்திகள்