யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

Jul 08, 2025,05:51 PM IST

லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஒரு புகார் வந்துள்ளது. 


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவர் மீது, திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றியதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண், தயாள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனதளவில் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 




இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் BNS பிரிவு 69-ன் கீழ் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 69 என்பது, திருமணம் அல்லது வேலை தருவதாக பொய் சொல்லி பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்கிறது. இது மோசடி மற்றும் சுரண்டல் செயலாகும். இப்படி செய்தால் 10 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். 


காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தயாள் ஐந்து வருடங்களாக தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார். தயாள் தனது குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் தன்னை "மருமகளாக" ஏற்றுக்கொண்டதாகவும், இது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 வருடங்களாக, புகார்தாரர் கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். அந்த நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி, அவரை உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் புகார்தாரரை தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து, கணவன் போல் நடந்து கொண்டார். இதனால் அவர் அவரை முழுமையாக நம்பினார்.


அந்தப் பெண் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். அந்த உறவின்போது, அவர் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுரண்டப்பட்டார். பின்னர், அந்த நபர் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற பொய்யான உறவுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் 14, 2025 அன்று, அந்தப் பெண் பெண்கள் உதவி எண் 181-க்கு போன் செய்தார். ஆனால், காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


மனதளவிலும், சமூக அளவிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், முதலமைச்சரின் அலுவலகம் மூலம் நீதி கேட்டுள்ளார். சாட் பதிவுகள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் அவரிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்