லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஒரு புகார் வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவர் மீது, திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றியதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண், தயாள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனதளவில் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் BNS பிரிவு 69-ன் கீழ் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 69 என்பது, திருமணம் அல்லது வேலை தருவதாக பொய் சொல்லி பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்கிறது. இது மோசடி மற்றும் சுரண்டல் செயலாகும். இப்படி செய்தால் 10 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தயாள் ஐந்து வருடங்களாக தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார். தயாள் தனது குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் தன்னை "மருமகளாக" ஏற்றுக்கொண்டதாகவும், இது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 வருடங்களாக, புகார்தாரர் கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். அந்த நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி, அவரை உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் புகார்தாரரை தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து, கணவன் போல் நடந்து கொண்டார். இதனால் அவர் அவரை முழுமையாக நம்பினார்.
அந்தப் பெண் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். அந்த உறவின்போது, அவர் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுரண்டப்பட்டார். பின்னர், அந்த நபர் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற பொய்யான உறவுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் 14, 2025 அன்று, அந்தப் பெண் பெண்கள் உதவி எண் 181-க்கு போன் செய்தார். ஆனால், காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனதளவிலும், சமூக அளவிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், முதலமைச்சரின் அலுவலகம் மூலம் நீதி கேட்டுள்ளார். சாட் பதிவுகள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் அவரிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}