லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது ஒரு புகார் வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவர் மீது, திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றியதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண், தயாள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனதளவில் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் BNS பிரிவு 69-ன் கீழ் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 69 என்பது, திருமணம் அல்லது வேலை தருவதாக பொய் சொல்லி பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்கிறது. இது மோசடி மற்றும் சுரண்டல் செயலாகும். இப்படி செய்தால் 10 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தயாள் ஐந்து வருடங்களாக தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார். தயாள் தனது குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் தன்னை "மருமகளாக" ஏற்றுக்கொண்டதாகவும், இது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 வருடங்களாக, புகார்தாரர் கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். அந்த நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி, அவரை உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அவர் புகார்தாரரை தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து, கணவன் போல் நடந்து கொண்டார். இதனால் அவர் அவரை முழுமையாக நம்பினார்.
அந்தப் பெண் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். அந்த உறவின்போது, அவர் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுரண்டப்பட்டார். பின்னர், அந்த நபர் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற பொய்யான உறவுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் 14, 2025 அன்று, அந்தப் பெண் பெண்கள் உதவி எண் 181-க்கு போன் செய்தார். ஆனால், காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனதளவிலும், சமூக அளவிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், முதலமைச்சரின் அலுவலகம் மூலம் நீதி கேட்டுள்ளார். சாட் பதிவுகள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் அவரிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}