சென்னை: பெண்கள் தான் நம் சமூகத்தின் முதுகெலும்பு. அவர்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளர முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்' சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு 2026 இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை என்பது இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனை. இந்நியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் நம்மை பார்த்து பின்பற்றி வரக்கூடிய சாதனை இது.

உயர் பொறுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வரவேண்டும். சமூகத்தின் முதுகெலும்பாக பெண்கள் உள்ளனர். மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சியாகதான் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் அமைந்திருக்கிறது. பெண்களின் உடல்நலனைப் பேணும் வகையில், கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க, 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளர முடியாது. பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு. தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்திய கருத்து இது தான். ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்க, சுதந்திரமாக வாழ, மரியாதையான ஊதியம் பெற உரிய கட்டமைப்பை உருவாக்குவோம். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார். சொந்த பெண்களுக்கு பங்கு, காவல்துறையில் பெண்கள் என்று நீண்ட பட்டியலை சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}