இன்று ஒரு கவிதை.. மகளிர் உரிமை!

Feb 28, 2025,04:10 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


ஆம். மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

என்ன உரிமை ?  எதற்காக வேண்டும் ? 

ஆண், பெண் சரிநிகர் சமான உரிமை வேண்டும்..!!

அவள் அவளாக இருக்க உரிமை வேண்டும் ..!!


பத்துக்கும் ஐந்துக்கும் ஆணைச் சார்ந்து ,

பரிதவிக்கும் நிலை மாற ,

படித்து, ஆணுக்கு நிகராக சம்பாதிக்க ,

பாடுபடும் குடும்ப மகளிர்க்கு ,


சமையல் கடமையோடு, இப்போது ,

சேர்ந்து விட்டது அலுவலகக்  கடமையும் .  

சம்பாதிக்க ஆரம்பித்தும், சமையல் கட்டு மட்டும் ,

சாகிற வரை அவளை விடுவதாய் இல்லை .




ஞாயிறு என்றால் அனைவருக்கும்  ஓய்வு.

ஞாயிறு என்றால்  அவளுக்கோ நாள் முழுதும் வேலை .

ஆணுக்கு நிகராக உழைக்கும் அவளுக்கும் ,

அந்த ஒரு நாள் ஓய்வு எடுக்க உரிமை வேண்டும்.

 

மலர் என்றோ, நிலவு என்றோ, 

பூமித்தாய் என்றோ, காவிரித்தாய் என்றோ,

சரஸ்வதி என்றோ, லெஷ்மி என்றோ,

மகளிரை வர்ணிக்க வேண்டாம்..!!


பெண்மையை இழிவுபடுத்தும் சொற்களை,

அகராதியில் இருந்து அகற்றினாலே  போதும்.!!

அது இல்லையெனில்..!!

விதவை, வாழாவெட்டி, மலடி, வேசி, பரத்தை... என்ற

விகற்ப சொற்களுக்கு, ஏற்ற எதிர்பால் சொல்லை,

அகராதியில் சேர்க்க, அவளுக்கு உரிமை வேண்டும்..!!


பெண் போகப் பொருள்  அல்ல. அவள் ,

உணர்வுள்ள மனுஷியாய் வாழ உரிமை  வேண்டும்..!!

பெண்ணுக்கு எதிரான  வன்  கொடுமைகள் ,

அனைத்தையும் வேரறுக்க  உரிமை  வேண்டும்..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்