சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு விருதும், அதற்குரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி சிறந்த புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் தேவிபாரதி. 1975 முதல் எழுதி வரும் தேவிபாரதி, சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சுற்றி தனது எழுத்துக்களத்தை அமைத்துக் கொண்டவர்.
சமூக உளவியல் பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இடையில் சாலை விபத்தில் சிக்கி பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் நீர்வழிப்படூஉம். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலும், டிவி தொடர்களிலும் கூட இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான தேவிபாரதிக்கு சாக்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை இலக்கிய உலகினர் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}