"நீர்வழிப் படூஉம்" நூூலுக்காக.. எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

Dec 20, 2023,03:45 PM IST

சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.


தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு விருதும், அதற்குரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி சிறந்த புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மிகவும் எளிமையான  குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் தேவிபாரதி. 1975 முதல் எழுதி வரும் தேவிபாரதி, சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சுற்றி தனது எழுத்துக்களத்தை அமைத்துக் கொண்டவர்.


சமூக உளவியல் பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இடையில்  சாலை விபத்தில் சிக்கி பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் நீர்வழிப்படூஉம். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சினிமாவிலும், டிவி தொடர்களிலும் கூட இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான தேவிபாரதிக்கு சாக்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை இலக்கிய உலகினர் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்