"நீர்வழிப் படூஉம்" நூூலுக்காக.. எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

Dec 20, 2023,03:45 PM IST

சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.


தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு விருதும், அதற்குரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி சிறந்த புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மிகவும் எளிமையான  குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் தேவிபாரதி. 1975 முதல் எழுதி வரும் தேவிபாரதி, சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சுற்றி தனது எழுத்துக்களத்தை அமைத்துக் கொண்டவர்.


சமூக உளவியல் பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இடையில்  சாலை விபத்தில் சிக்கி பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் நீர்வழிப்படூஉம். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சினிமாவிலும், டிவி தொடர்களிலும் கூட இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான தேவிபாரதிக்கு சாக்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை இலக்கிய உலகினர் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்