பாவேந்தர் பாரதிதாசன் விருது விழாவில்.. எழுத்தாளர் -கவிஞர் இரா. கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது!

Apr 21, 2025,04:26 PM IST
திருச்சி: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த விழாவில், எழுத்தாளர் -கவிஞர் இரா.கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு,  20/4/2025 அன்று திருச்சியில் உள்ள வசந்தம் அரங்கத்தில் முப்பெரும் விழா  நடைபெற்றது.  பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, 423 வது மாத இளந்தென்றல் கவியரங்கம் மற்றும் தமிழ்ப்பணி, இலக்கியப் பணி, கவிப்பணி, பொதுப்பணி, சிறந்த தொழில் முனைவோர் மற்றும் உழைப்பால் உயர்ந்தோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் உலகம் போற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் பேரனான கலைமாமணி முனைவர் கோ. பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்மாமணி விருது, கவிமாமணி விருது, உழைப்பு செம்மல் விருது, வாழ்நாள் சாதனை விருது,  ஆகிய உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.



இதில் 2025 ஆம் ஆண்டுக்கான  தமிழ்மாமணி விருது கவிஞர் - எழுத்தாளர். இரா கலைச்செல்வி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார்.

அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்