அரசியலிலிருந்து எதியூரப்பா ஓய்வு..  இறுதிவரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என உறுதி!

Feb 25, 2023,11:31 AM IST
பெங்களூரு:  தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் இறுதி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.



தென் இந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெயரும், பெருமையும் எதியூரப்பாவுக்கு உண்டு. கர்நாடகத்தின் முதல்வராக இருந்தவர். கர்நாடக பாஜகவின் தலைவராக திகழ்ந்தவர். கர்நாடகத்தின் முக்கியமான ஜாதியான லிங்காயத்து சமுதாயத்தினரை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். கர்நாடகத்தில் பாஜக வலுவான நிலையை அடைய எதியூரப்பாவின் தலைமையும், வழிகாட்டுதலும் தான் முக்கியக் காரணம்.



இடையில் கட்சியுடன் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தனிக்கட்சி நடத்தினார். பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஆனால் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தபோது எதியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எதியூரப்பா.

சட்டசபையில் நேற்று அவர் பேசியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதியூரப்பா கூறுகையில்,  தீவிர அரசியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இருப்பினும் பாஜகவுக்காக எனது இறுதி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜக வெல்ல வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன்.  பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எனது ஒரே நோக்கமாகும். அது நடப்பதை நான் உறுதி செய்வேன்.

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இது எனது பிரியாவிடைப் பேச்சு. எனக்கு பேச அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி என்றார் எதியூரப்பா. இந்த அறிவிப்பின் மூலம் கர்நாடக அரசியலின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒன்றின் அரசியல் செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. அதேசமயம், இவரை விட மூத்தவரான முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்னும் தீவிர அரசியலில் இருக்கிறார், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதியூரப்பா 4 முறை கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். 3 முறை கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக திகழ்ந்துள்ளார். இவரது மனைவி பெயர் மைத்ராதேவி. இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி, 2 மகன்கள்  - ராகவேந்திரா, விஜயேந்திரா உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்