- ரதி தேவி
நேசமே
காதல் என்ற மூன்று
எழுத்தில் மறைந்துள்ளாய்.....
ஆருயிர் காதல்
அன்னைத் தம்
பிள்ளையின்பாற்
கொண்ட காதல்....
நெஞ்சில்
ஒளிந்துள்ள
காதல்
தந்தை தன்
பிள்ளையின்பாற்
கொண்ட காதல்...

உயிரோடு உயிரான
காதல்
கணவன்
மனைவியின்பாற்
கொண்ட காதல்...
நட்பிற்கு அழகு
தோழமைகளின்
காதல்....
அன்பு, நேசம்,நட்பு
மூன்றையும் வென்று விடும்
காதல்...!
இலைமேல்
பனித்துளி போல் அல்ல
நம் நட்பு..
வானத்தில் நட்சத்திரம்
போன்று
நட்பெனும்
காதல் ....
என்னவனே
என்னவென்று
சொல்வேன்
உந்தன் கரம்
பிடித்து
சொன்ன காதலை .......!
வேண்டுகிறேன்
ஏழேழு ஜென்மம்
நீயே
என் உயிராக ....!
உன்னையே நேசிக்கிறேன்
உனக்காக எந்தன் உயிர்
உன் சுவாசமே என் மூச்சு
என் மனம்
வாடும் போது
உந்தன் தோளே...
கொள்கிறேன்....!
தேடுகிறதே
உந்தன் மடியே
கொஞ்சம் கண்
அயர்ந்து கொள்கிறேன்.....!
இமை மூடும்
நேரம்
உந்தன் உள்ளங்கையே
தலையணையாக....
என்னவனின்
நேசமே
என் வாசம்
இதய துடிப்பின்
ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைத்து....
நீ அருகில் இருக்கும்
அந்த நொடியே
என் வாழ்வில்
சந்தோஷம்...
யாதுமாகி இருக்கின்றாய்
யாசகம் கேட்க
ஏதுமில்லை என்னவனிடம்
வேறு எதுவும்
தேவையில்லை
என்னவனின்
பேரன்பு ஒன்றே
போதும்
இந்த யுகத்தில்....!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
{{comments.comment}}