டெல்லி: ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா தான் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை இன்று கலைத்து விட்டு, காங்கிரஸில் இணைந்து விட்டார். தெலங்கானாவில் ஏற்கனவே ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சர்மிளாவின் வரவு புதுப் பலமாக அமைந்துள்ளது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தனது தந்தை மறைவுக்குப் பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் இருக்கிறார். இவரது தங்கைதான் சர்மிளா. ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்குத் துணையாக இருந்து வந்தார் சர்மிளா. அவரது கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டும் வந்தவர் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா. ஆனால் பின்னர் ஜெக னுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.
சமீப காலமாக அவர் தனது அரசியல் வேகத்தை குறைக்கத் தொடங்கினார். மாறாக காங்கிரஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி வந்தார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சர்மிளா. தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் சர்மிளா அறிவித்திருந்தார். பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போதே ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க போவதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்து தானும் அக்கட்சியில் இணைந்தார் சர்மிளா.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சர்மிளா. சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கார்க்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சோனியா காந்தியையும் சர்மிளா நேரில் பார்த்து வாழ்த்து பெற்றார்.
சில மாதங்களில் ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் சர்மிளாவை வைத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் நெருக்கடி தரலாம் என்று எதிர்பார்க்க்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் பரபரப்பான அண்ணன் - தங்கச்சி சண்டையை ஆந்திராவில் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் முனைப்புடன் இருக்கிறார்.. இதனால் பலமுனை தாக்குதலை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}