தெலங்கானா காங்கிரஸுக்குப் போன தங்கச்சி சர்மிளா.. ஆந்திராவில் அண்ணன் ஜெகனுக்கு சிக்கல் வருமா?

Jan 04, 2024,03:46 PM IST

டெல்லி: ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா தான் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை இன்று கலைத்து விட்டு, காங்கிரஸில் இணைந்து விட்டார். தெலங்கானாவில் ஏற்கனவே ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சர்மிளாவின் வரவு புதுப் பலமாக அமைந்துள்ளது.


மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தனது தந்தை மறைவுக்குப் பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் இருக்கிறார். இவரது தங்கைதான் சர்மிளா. ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்குத் துணையாக இருந்து வந்தார் சர்மிளா. அவரது கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டும் வந்தவர் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா. ஆனால் பின்னர் ஜெக னுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.




சமீப காலமாக அவர் தனது அரசியல் வேகத்தை குறைக்கத் தொடங்கினார். மாறாக காங்கிரஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி வந்தார்.  கடந்த நவம்பர் 3ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சர்மிளா. தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் சர்மிளா அறிவித்திருந்தார். பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.


தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போதே ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க போவதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்து தானும் அக்கட்சியில் இணைந்தார் சர்மிளா.




டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சர்மிளா. சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கார்க்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சோனியா காந்தியையும் சர்மிளா நேரில் பார்த்து வாழ்த்து பெற்றார்.


சில மாதங்களில் ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில்  இணைந்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் சர்மிளாவை வைத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் நெருக்கடி தரலாம் என்று எதிர்பார்க்க்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் பரபரப்பான அண்ணன் - தங்கச்சி சண்டையை ஆந்திராவில் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் முனைப்புடன் இருக்கிறார்.. இதனால் பலமுனை தாக்குதலை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்