10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

Oct 25, 2025,01:55 PM IST

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு நடந்து முடிந்துள்ளது. தற்போது அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  


2025ஆம் ஆண்டு மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில், தமிழகத்தில் 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்த பொதுத் தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025-26ஆம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 




இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டு 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பொதுத்தேர்வு அட்டவனை வெளியாக வில்லை. தற்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை  அன்பில் மகேஷ் கூறுகையில், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 2025 நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்றும், நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டடம் நடைபெறும். இதன் பிறகு 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்