தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுமாடுகளுக்கு மங்கள இசை முழங்க கோ-பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று தஞ்சை பெரிய கோவிலில் நந்தி எம்பெருமானுக்கும், பசுக்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 108 பசுக்களுக்கு ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுக்களும், கன்றுகளும் வரிசையாக நிறுத்தப்பட்டன. பசுக்களுக்குப் புத்தாடை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, சந்தனம், குங்குமம் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

வேத மந்திரங்கள் முழங்க, பசுக்களுக்குப் பழங்கள், அகத்திக்கீரை மற்றும் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியமாக வழங்கப்பட்டன. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் திரளாகக் கலந்து கொண்டு பசுக்களுக்கு உணவளித்து வணங்கினர்.
கோ-பூஜையைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள பிரம்மாண்ட நந்தி எம்பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறிகள், கனிகள், இனிப்புகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவனுக்கு, இயற்கையின் கொடையான விளைச்சலை நன்றியுடன் சமர்ப்பிப்பதே இந்த அலங்காரத்தின் நோக்கம். வழிபாடு முடிந்தவுடன், அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் அங்கிருந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}