பொங்கல்: ஜனவரி 12 டூ 14ம் தேதி வரை 19,484 சிறப்புப் பேருந்துகள்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Jan 08, 2024,04:37 PM IST
சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது.  12ம் தேதி இரவிலிருந்தே மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்வதற்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று காலை அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி சென்னையிலிருந்து ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 19484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 



கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் 11 முன்பதிவு மையங்கள் செயல்படும்.  இதில் கிளாம்பாக்கத்தில் மட்டும் 5 முன்பதிவு மையங்கள் இருக்கும்.
கிளாம்பாக்கம், கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.  கோயம்பேடு வருவோர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு எந்தத் விதமான தடையும் இல்லாத வகையில் இணைப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும். 

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் மொத்தம் 17,589 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்