சென்னை: தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களுக்கும், நாளை 13 மாவட்டங்களுக்கும் மிதமானது முதல் கனமழை வரையிலான முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக ஆங்காங்கு மழை காணப்படுகிறது. நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படவுள்ளது. இது புயலாக மாறும் என்றும் இருப்பினும் இது தமிழ்நாட்டுக்கான புயல் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தொடங்கி 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

20ம் தேதி - இன்று கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்.
21ம் தேதி - ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை.
22ம் தேதி - கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால்.
23ம் தேதி - கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.
24ம் தேதி முதல் 26ம் தேதி வரை- பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு மழை இருக்க வாய்ப்பில்லை. லேசானது முதல் மிதமான மழையை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மிடுக்கான பார்வை கண்டு திடுக்குன்னு தான் விழிக்கிறேன்!
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்
திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது.. திமுக முப்பெரும் விருதுகள் அறிவிப்பு
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
{{comments.comment}}