பெங்களூரு: பெங்களூரில் கார் கழுவியது, தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சியது தொடர்பாக 22 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 1.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு அது வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூர் மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் உள்ளிட்டவை விதித்துள்ளன.
குறிப்பாக கார்களை கழுவுவது போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி குடிநீரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தியது, கார்களை கழுவுதல் போன்ற அத்தியாவசியம் அற்ற பணிகளுக்கு பயன்படுத்தியதாக 22 குடும்பங்களுக்கு பெங்களூர் குடிநீர் வாரியம் தலா ரூபாய் 5000 அபராதம் விதித்து உள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ₹ 1.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் மாநகரம் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வறட்சி நிலவுவதாலும் பெங்களூருக்கான குடிநீர் வினியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைவருமே குடிநீருக்கும். பிற பயன்பாட்டுக்கான நீருக்கும் கடும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் தங்களது குடியிருப்புகளில் வசிப்போருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. குடிநீரை எப்படி எல்லாம் சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடிநீரை தேவையில்லாத வேலைகளுக்கு பயன்படுத்தியதாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் அளிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}