சென்னையில்.. ரூ. 5 கோடி கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு!

Mar 13, 2025,12:00 PM IST

சென்னை: கடன் தொல்லையால் மருத்துவர், வழக்கறிஞர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை மூலம் தங்களது உயிரை நீத்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (52). இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (47) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வந்த் (19) மற்றும் லிங்கேஷ்குமார் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர் .


இந்த நிலையில்  4 பேரும் நேற்று திடீரென தூக்கிட்ட நிலையில் உயிரை மாய்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பக்கத்து வீட்டார் உடனே திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் மருத்துவர் பாலமுருகனுக்கு ஐந்து கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த கடன் தொல்லையால் பாலமுருகனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்கொலை தீர்வாகாது




எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது. தற்போதுள்ள காலத்திற்கு ஏற்ப வாழ ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி கஷ்டப்படும் செயல் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டது. ஒவ்வொருவரும் ஸெல்ப் அனலைஸ் எனக்கூடிய சுய தெளிவை  ஏற்படுத்தி செயல்பட வேண்டியது தற்போது உள்ள காலகட்டத்தில் அவசியமாகி வருகிறது.


நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது.. எவ்வளவு செலவு செய்கிறோம்.. தேவைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம்.. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்கிறோம்.. என்பதையெல்லாம் அறிந்து கொண்டு அதற்கான பட்டியலை போட்டு செயல்படுத்தினால் மட்டுமே கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். அதேசமயம் வருமானத்திற்கு மீறி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே நம் வாழ்க்கையும் அமைய வேண்டும்  என எண்ணக்கூடாது.


இவ்வழிகளை பின்பற்றினாலே அளவுக்கு அதிகமாக  கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய அவசியம் ஒன்று ஏற்படாது. அப்படியே கடன் வாங்கினாலும் கூட நம்மால் அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதையும் யோசித்து வாங்குவது நல்லது. ஒருவேளை கடன் தொல்லை உள்பட எந்த வகையான பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவைுயும் எடுக்காதீர்கள். அதையெல்லாம் சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. 


பல்வேறு பிரச்சினைகளால், மன அழுத்தத்திற்கு ஆளானாலோ.. மன உளைச்சல் ஏற்பட்டாலோ இதிலிருந்து விடுபட 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வுகளை பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்