புத்தகப் பிரியர்களே ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 4ம் தேதி 47வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது

Dec 20, 2023,05:51 PM IST

சென்னை: சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். அந்த வகையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது. 




நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறும் என்று அஏறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரையும் தினசரி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


வழக்கம் போல சிறப்பான முறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் பூமி பூஜையுடன் ஏற்கனவே தொடங்கி விட்டன. பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இந்த முறையும் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எங்களுக்கு மகன் பிறந்த பிறகுதான்.. பும்ரா பெரிய ஆளானார்.. மனைவி சஞ்சனா கணேசன் நெகிழ்ச்சி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

news

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்