சென்னை: சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். அந்த வகையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறும் என்று அஏறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரையும் தினசரி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
வழக்கம் போல சிறப்பான முறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் பூமி பூஜையுடன் ஏற்கனவே தொடங்கி விட்டன. பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இந்த முறையும் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}