சென்னை: சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். அந்த வகையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது.

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறும் என்று அஏறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரையும் தினசரி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
வழக்கம் போல சிறப்பான முறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் பூமி பூஜையுடன் ஏற்கனவே தொடங்கி விட்டன. பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இந்த முறையும் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கிடைக்காதவற்றை நேசிக்காதே மனமே.. Dear feelings, Please stop!
சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!
உலகம் அப்படியேதான் இருக்கிறது.. No, The World Is Not broken
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
{{comments.comment}}