டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி கட்ட தேர்தல் ஜுன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் இறுதி கட்ட பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் எவ்வித தடையும் இன்றி அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}