டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி கட்ட தேர்தல் ஜுன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் இறுதி கட்ட பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் எவ்வித தடையும் இன்றி அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}