டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி கட்ட தேர்தல் ஜுன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் இறுதி கட்ட பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் எவ்வித தடையும் இன்றி அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}