Loksabha Elections: விறுவிறுப்பான 6வது கட்ட தேர்தல்.. கடும் வெயிலிலும் மக்கள் ஆர்வம்

May 25, 2024,11:52 AM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். 


முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தினர். 


லோக்சபா தேர்தல் ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் கோலாலமாக நடைபெற்று வருகிறது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில் 11.13 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், மற்றும் 5 கோடியே 29 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 5 ஆயிரத்து 120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர பீகாரில் 8 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


தலைநகர் டெல்லியில் ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லி மாநகரம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 641 வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி,  ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவராஜ் சுஷ்மா மகளும்  பாஜக வேட்பாளருமான பன்சூரி சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். 




ஹரியானா கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்