சென்னை: லோக்சபா தேர்தலில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தினர்.
லோக்சபா தேர்தல் ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் கோலாலமாக நடைபெற்று வருகிறது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில் 11.13 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், மற்றும் 5 கோடியே 29 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 5 ஆயிரத்து 120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர பீகாரில் 8 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநகரம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 641 வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவராஜ் சுஷ்மா மகளும் பாஜக வேட்பாளருமான பன்சூரி சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள்.

ஹரியானா கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}