சென்னை: லோக்சபா தேர்தலில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தினர்.
லோக்சபா தேர்தல் ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் கோலாலமாக நடைபெற்று வருகிறது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில் 11.13 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், மற்றும் 5 கோடியே 29 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 5 ஆயிரத்து 120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர பீகாரில் 8 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநகரம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 641 வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவராஜ் சுஷ்மா மகளும் பாஜக வேட்பாளருமான பன்சூரி சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள்.
ஹரியானா கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}